Super Singer Junior 02 - விஜய் TV



2009இல் ஆரம்பித்த இந்த Airtel சூப்பர் சிங்கர் ஜூனியர் 02 பயணம் ஒருவழியாக முடிவுக்கு வந்தது.



ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் 2 பட்டத்தை அல்கா அஜித் தட்டிச் சென்றார். விஜய் டி.வி.,யில் ஒளிப்பராகி வந்த குட்டீசுக்கான பாட்டு போட்டி, ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் 2 இறுதி போட்டி 17 /06 /2010அன்று நடந்தது. இந்த நிகழ்ச்சி ‌நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. இறுதிப் போட்டிக்கு தேர்வாகியிருந்த அல்கா அஜித், ஷ்ரவன், ரோஷன், நித்யஸ்ரீ, ஸ்ரீகாந்த் ஆகியோர் அதிரடியாக களமிறங்கினர். சித்ரா, மால்குடி சுபா, ம‌னோ, உன்னி மேனன், ஸ்ரீநிவாஸ், சுசித்ரா போன்ற பின்னணி பாடகர்களும், இசையமைப்பாளர்கள் எம்.எஸ். விஸ்வநாதன், ஜேம்ஸ் வசந்தன்,. தேவி ஸ்ரீ பிரசாத் ஆகியோரும் கலந்து கொண்டனர். ஒவ்வொரு போட்டியாளரும் 2 பாடல்களை பாடினர். எஸ்.எம்.எஸ்., மூலம் வெற்றியாளர் தேர்வு செய்யப்பட்டார். 3.5 லட்சம் எஸ்.எம்.எஸ்., ஓட்டுகள் பதிவாகின. அல்கா அஜித் ஏர்டெல் சூப்பர் சிங்கர் பட்டத்தை வென்றார். அவர் இறுதிப் போட்டியில் சிங்கார வேலனே வா வா, முன்பே வா அன்பே வா என்ற பாடல்களையும் பாடி அரங்கமே அதிர்ந்த வரவேற்பை பெற்றார். அல்கா 7 வயது முதலே பாட்டு பாடி வருகிறார். அவருக்கு 11 மொழிகளில் பாடல்களை பாடும் திறன் இருக்கிறது. இதுவரை 500க்கும் மேற்பட்ட ‌மேடை கச்சேரிக‌ளில் பாடியுள்ளார். யுனஸ்கோ தங்கப் பதக்கம் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.

அல்க அஜித்திற்கு Airtel சூப்பர் சிங்கர் ஜூனியர் 02 என்ற பட்டம் மட்டுமல்லாது 25 லட்சம் ரூபா மதிப்புள்ள அழகிய வீடொன்றும் பரிசாக வழங்கப்பட்டது. ஷரவன் போட்டியில் இரண்டாவது இடத்தை தட்டிக்கொண்டார், அவரிற்கு பரிசாக வழங்கப்பட்டதோ "Stylish Car". ஆறுதல் பரிசுகளாக நித்யஸ்ரீ மற்றும் ரோஷனிட்கு தலா 02இலட்சம் ரூபா பணப்பரிசு வழங்கப்பட்டது. இந்த போட்டியின் பிரபல போட்டியாளராக ஸ்ரீகாந்த் தெரிவுசெய்யப்பட்டு 03 இலட்சம் ரூபா பணப்பரிசு வழங்கப்பட்டது. விசேட பரிசுகளாக பிரியங்கா மற்றும் ஸ்ரீநிஷாவிற்கு தலா 01 இலட்சம் ரூபா பணப்பரிசு வழங்கப்பட்டது.....

தொடரும் சந்தேகம்... நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவரோ மொத்த வாக்குகளின் தொகை 3 .6 இலட்சம் (Wild Card சுற்றின் மொத்த வாக்குகளை விட குறைந்த தொகை ) என அறிவித்தவேளை இவ்விழாவிற்கு சிறப்பு அதிதியாக வருகை தந்து இறுதி முடிவுகளை தந்த கார்த்திக்கோ மொத்த வாக்குகளின் தொகை 13 இலட்சம் என அறிவித்தார்...


ஒவ்வொரு போட்டியாளருக்குமான மொத்த வாக்குகளின் எண்ணிக்கை வெளியிடப்படாதது ஏன்? ஆறுதல் பரிசு வழங்கப்பட்டதன் நோக்கம் என்ன...என்னைபொறுத்தவரை ஆறுதல் பரிசு Wild Card சுற்றில் பங்கேற்ற அனைத்து போட்டியாளர்களிட்கும் வழங்கப்பட்டிருக்க வேண்டும்...

The confusion remains!

உங்கள் செல்லிடப்பேசி ஒரு நோய் காவியா...?

உங்களிடம் செல்லிடப்பெசியோன்று உள்ளதா...? (அனாவசியமான கேள்வி...இதைவிட உங்களிடம் ஒரு செல்லிடப்பேசி இல்லையெனில் இந்த பதிவை புறக்கணிக்கவும் என்று எழுதியிருந்தால் நன்றாக இருக்கும்...) கீழ் உள்ள இணைப்பை சொடுக்கி கேட்கப்படும் கேள்விகளுக்கு உண்மையாக பதிலளியுங்கள்...
உங்கள் செல்லிடப்பேசி ஒரு நோய் காவியா இல்லையா என அப்புறம் முடிவெடுக்கலாம்.
என்னுடைய செல்லிடப்பேசியில் இருக்கும் கிருமிகளின் எண்ணிக்கை... கையில் எடுக்கவே அருவருப்பாக உள்ளது..உங்களது எப்படி?

How many germs live on your cell phone?

Created by Oatmeal

ஆதாரம் : http://theoatmeal.com/quiz/phone_germs

நன்றி...

எமது வாழ்நாளில் செய்யவேண்டிய 20 விடயங்கள்...

எமது வாழ் நாளில் நாம் அனைவரும் கட்டாயம் பூர்த்தி செய்யவேண்டிய 20 விடயங்கள்...பின்வருமாறு...






  1. சொந்தமாக தொழில் ஒன்றை தொடங்குங்கள்

  2. சொந்த வீடொன்றை கட்டிக்கொள்ளுங்கள்

  3. உங்கள் அன்பிட்குரியவரை தேடிக்கொள்ளுங்கள்

  4. குழந்தை ஒன்றை பெர்த்ருக்கொல்லுங்கள்

  5. உலகை அறிந்துகொள்ளுங்கள்

  6. கடல் பிரயாணம் அல்லது மலை ஏற்றம் செய்யுங்கள்

  7. நீங்கள் கற்பனை செய்த செயலை செய்து முடியுங்கள்

  8. செல்வந்தர் ஆகுங்கள்

  9. உங்கள் திறமையை கண்டறியுங்கள்

  10. உங்களின் தொழிலில் சிறப்பு தேர்ச்சியாடையுங்கள்

  11. நீங்கள் கற்பனை செய்த இடத்தில் வாழுங்கள்

  12. மற்றவர்களை மன்னியுங்கள்

  13. உங்கள் தனித்தன்மையை வளருங்கள்

  14. மற்றவர்களிற்கு உதவுங்கள்

  15. ஆரோக்கியமாக இருங்கள்

  16. சமுகத்திற்கு / பூமிக்கு நல்லது செய்யுங்கள்

  17. யாருடனாவது நண்பராகுங்கள்

  18. உங்கள் குடும்பத்தை கவனியுங்கள்

  19. உங்களை நீங்களே அறிந்து / விளங்கிக் கொள்ளுங்கள்

  20. எல்லாவற்றுக்கும் மேலாக சந்தோசமாக இருங்கள்...

எல்லா விடயங்களும் இதே ஒழுங்கில் இருக்கவேண்டுமென்பது கட்டாயம் அல்ல எது எப்படியோ..எல்லாம் நடந்தால் சரி...

எழுத்துக்கள் முக்கியமா...?

வழமையாக எம்மவர் கூறுவதுண்டு மருத்துவர்கள் எழுதுவதை படிக்க முடிவதில்லை என்று... ஏனெனில் எழுத்துக்கள் புரிவதில்லை அவர்களின் கையெழுத்து கிறுக்கலாக உள்ளதென பல முறைப்பாடுகள்... கீழே உள்ளதை உங்கள்ளல் படிக்க முடிகிறதா...ஆம் எனில் நீங்களும் விசேட பிறவிதான்...

if yuo can raed tihs, you hvae a sgtrane mnid, too. Can you raed tihs? Olny 55 plepoe out of 100 can.

i cdnuolt blveiee taht I cluod aulaclty uesdnatnrd waht I was rdanieg. The phaonmneal pweor of the hmuan mnid, aoccdrnig to a rscheearch at Cmabrigde Uinervtisy, it dseno't mtaetr in waht oerdr the ltteres in a wrod are, the olny iproamtnt tihng is taht the frsit and lsat ltteer be in the rghit pclae. The rset can be a taotl mses and you can sitll raed it whotuit a pboerlm. Tihs is bcuseae the huamn mnid deos not raed ervey lteter by istlef, but the wrod as a wlohe. Azanmig huh? yaeh and I awlyas tghuhot slpeling was ipmorantt! if you can raed tihs you hvae a sgtrane mnid.


உகங்ளால் ப்இ பகக்த்தை பக்டிக முந்டிதால், உகங்ளை பாட்ராடியே கஆ வேடுண்ம். 100 குக் 55 மகக்ளால் மடுட்மே இபப்டி பக்டிக முயுடிம். எனான்ல் நபம்ப் முயடில்விலை, எபப்டி தஇ பக்டிறேகின் என்று? ஆசச்ரிமாயன சதிக்க் கொடண்து மதனினின் ளைமூ. ஒரு ஆய்ராயிசில்,கேபிம்ட்ரிஜ் பகல்க்லைழககம் இந்த உமைண்யை கடுண்பிப்டித்ள்துளது. எத்ழுக்துகள் எந்த வசையிரில் உளள்து எபன்து முகிக்மியல்லை. முதல் எத்ழுதும் கசிடையாக உள்ள எத்துழும், சயாரின இத்டதில் உளள்தா எபன்தை மடுட்ம் பாத்ர்தால் போதும். எனாதல் எறான்ல், மதனினின் மூளை முதல் எத்ழுயுதைம், கைடசி எத்ழுயுதைம் மடுட்மே பக்டிகும்.பாக்கி உள்ள எத்தழுதுகக்ளை தாகனாவே உவாள்ங்கி கொளுள்ம். ஆச்ரிசயகமால்யிலை? ம், நான் எபொப்துழும் நிதனைதுண்டு எத்ழுதுகக்ள் மிவுகம் முகிக்யம் என்று. உகங்ாளல் பக்டிக முந்தாடில் மற்ற பவதிர்ளுகக்கும், பந்ரிதுயுரைகங்ள்!!

செல்லிடப்பேசிகளும் விமான விபத்துகளும்...


அன்பார்ந்த விமான பிரயாணிகளே...

விமானத்தில் உங்களது செல்லிடப்பேசிகளின் பாவனையை தவிருங்கள். உங்கள் செல்லிடப்பேசியில் இருந்து வெளியாகும் கதிர் வீச்சானது, விமானத்திற்கும் கட்டுப்பாட்டு அறைக்கும் இடையிலான தொடர்பில் இடையுறு விளைவிக்கலாம்...இந்த இடையூறு, விபத்தில் முடிவுறக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகம்... உங்கள் உயிர் உங்கள் கையில்....கீழே காணப்படும் படத்தை பெரிப்பித்து படியுங்கள்...



முக்கிய குறிப்பு: செல்லிடப்பேசி பாவனையை வைத்தியசாலை விசேடமாக சத்திரசிகிச்சை செய்யும் இடங்களிலும், கதிரியக்க தாக்கம் உள்ள இடங்களில் தவிர்ப்பது நல்லது...

Super Singer Junior 02 - விஜய் TV


கடந்த சில வாரங்களிட்கு முன் நடந்த Wildcard சுற்றின் படி இறுதிபோட்டியில் பாடப்போகும் குட்டீசுகள்....

ஷ்ரவன் (SSJ 15)




அல்க அஜித் (SSJ 02)




நித்யஸ்ரீ (SSJ 11)




ஸ்ரீகாந்த் (SSJ 20)




ரோஷன் (SSJ 19)




போட்டி போகும் விதத்தை பார்த்தல் எதிபாராத திருப்பம் நிகழ வாய்ப்புகள் அதிகம்...(பலரின் எதிபார்ப்பு இறுதி சுற்றில் வெற்றி பெற்று Airtel Super Singer Junior 02 என்ற பட்டத்தையும் 25 லட்சம் மதிப்புள்ள அழகிய வீட்டையும் வெல்லப்போகும் போட்டியாளர் அல்க அஜித் என்பதேயாகும் )

இறுதி போட்டியின் நடுவர்கள் Wildcard சுற்று போல் பார்வையாளர்களே...நல்ல விடயம், உண்மையான திறமைக்கும் மக்கள் மனதை உண்மையாக கவர்ந்த அந்த ஒரு குட்டிக்கு சன்மானம் கிடைக்கும்.

இவர்களில் உங்கள் மனதை கவர்ந்த பாடகரை தெரிவு செய்ய...

இந்தியாவில் உள்ள ரசிகர்கள் தங்களது செல்லிடப்பேசியில் இருந்து குறுஞ்செய்தி மூலம் வாக்களிக்க முடியும்...எவ்வாறு கீழ் வரும் முறையில் வாக்குகளை பதிவு செய்யுங்கள்...

SSJContestant No <> to 57827 for eg: SMS SSJ 01 to 57827. *charges are applicable

வெளிநாடுகளில் உள்ள ரசிகர்கள் கீழே உள்ள இணைப்பின்வழி சென்று தமது வாக்குகளை பதியலாம்...

http://vijay.indya.com/jss09/vote/vote.asp

ஷ்ரவன், அல்க, நித்யஸ்ரீ, ஸ்ரீகாந்த, ரோஷன்... பார்ப்போம் இறுதிப்போட்டியில் வெல்லப்போவது யார்...? பட்டத்தை சூடப்போகும் அந்த செல்லக்குரல் யார்...? 25 லட்சம் மதிப்புள்ள அழகிய இல்லத்தை பரிசாக பெறப்போகும் அதிஷ்டசாலி யார்...?

காதலர்களே உசாரகுங்கள்...... (வாசிப்புகளின் தொகுப்பு)



(01) காதலர்கள் காத‌லி‌க்க‌த் துவ‌ங்‌கிய நேர‌த்‌தி‌ல் ‌நிறைய மன‌ம் ‌வி‌ட்டு‌ப் பேசுவா‌ர்க‌ள். ஆனா‌ல் பெரு‌ம்பாலான காதல‌ர்க‌ளி‌ன் பே‌ச்‌சி‌ல், அவ‌ர்களை‌ப் ப‌ற்‌றிய ‌விஷய‌ங்களை ‌விட, அவ‌ர்களது குடு‌ம்ப‌ம், ந‌ண்ப‌ர்க‌ள் ப‌ற்‌றிய ‌விஷய‌ங்க‌ள்தா‌ன் அ‌திகமாக இரு‌க்கு‌ம்.

(02) ஒருவரை ஒருவ‌ர் ந‌ன்கு பு‌ரி‌ந்து கொ‌ள்ள, த‌ங்களை‌ப் ப‌ற்‌றிய ‌விஷய‌ங்களை‌ப் ப‌ரிமா‌றி‌க் கொ‌ள்ள வே‌ண்டியது அவ‌சிய‌ம தான் . ஆனா‌ல், த‌ன்னை‌ப் ப‌ற்‌றியு‌ம், தன‌க்கு‌ நெரு‌ங்‌கியவ‌ர்க‌ள் ப‌‌ற்‌றிய ரக‌சிய‌ங்களையு‌ம் சொ‌ல்ல வே‌ண்டு‌ம் எ‌ன்று எ‌ந்த அவ‌சியமு‌ம் இ‌ல்லை.


(03) சில ரக‌சிய‌ங்க‌ள் ‌சிலரு‌க்கு‌த் தெ‌ரியாமல‌் இரு‌ப்பதுதா‌ன் ந‌ல்லது. எதையாது மறை‌த்தா‌ல் அது காதலரு‌க்கு செ‌ய்யு‌ம் துரோகமாக ‌நினை‌க்க‌க் கூடாது. உ‌ங்களை சா‌ர்‌ந்தவ‌ர்க‌ள் ப‌ற்‌றிய ரக‌சிய‌ங்களை கா‌ப்பது உ‌ங்க‌ள் கடமை எ‌ன்றுதா‌ன் ‌நினை‌க்க வே‌ண்டு‌ம்.


(04) ஒ‌வ்வொரு குடு‌ம்ப‌த்‌திலு‌ம் எ‌த்தனையோ ந‌ல்ல ம‌ற்று‌ம் கெட‌ட் ‌விஷய‌ங்க‌ள் நட‌ந்து முடி‌ந்து போ‌யிரு‌க்கு‌ம். அதனையெ‌ல்லா‌ம் காதல‌‌ர் / காத‌லி அ‌றி‌ந்‌து கொ‌ண்டே ‌தீர வே‌ண்டு‌ம் எ‌ன்ற க‌ட்டாய‌மி‌ல்லை. அ‌ப்படி அ‌றி‌ந்து கொ‌ள்ள வே‌ண்டு‌ம் எ‌ன்றாலு‌ம் அத‌ற்கு இது நேர‌மி‌ல்லை. தெ‌ரிய வே‌ண்டிய நேர‌த்‌தி‌ல் சொ‌ல்‌லி‌க் கொ‌ள்ளலா‌ம்.

(05) எதையாவது பேச வே‌ண்டு‌ம் எ‌ன்ற எ‌ண்ண‌த்‌தி‌ல் தேவை‌யி‌ல்லாததெ‌ல்லா‌ம் பே‌சினா‌ல் ஆப‌த்து‌த்தா‌ன் வரு‌ம்.


(06) சில தேவை‌யி‌ல்லாத ‌விஷய‌ங்களை‌ப் பேசுவதா‌ல், அதனை ம‌ற்றவ‌ர் தவறாக‌ப் பு‌ரி‌ந்து கொ‌‌ள்ள நே‌ரிடலா‌ம். உ‌ங்க‌ள் ‌மீதான ஒரு அ‌திரு‌ப்‌தியையு‌ம் ஏ‌ற்படு‌த்தலா‌ம்.

(07) எதை‌த்தா‌ன் பேசுவது ‌எ‌ன்று ‌நீ‌ங்‌க‌ள் கே‌ட்கலா‌ம், உ‌ங்களு‌க்கு ச‌ம்ப‌‌ந்த‌ப்படாத ‌நிக‌ழ்‌ச்‌சிக‌ள், சி‌னிமா ந‌ட்ச‌த்‌திர‌ங்களை‌ப் ப‌ற்‌றி,சி‌னிமா‌‌த் ‌திரை‌ப்பட‌ங்க‌ள், பொழுதுபோ‌க்கு அ‌ம்ச‌ங்க‌ள், மிக‌ப்பெ‌ரிய தலைவ‌ர்க‌ள் என ஆ‌ர்வ‌மி‌க்க எ‌ந்த ‌விஷய‌த்தை‌ப் ப‌ற்‌றி வே‌ண்டுமானாலு‌ம் பேசு‌ங்க‌ள். சொ‌ந்த வா‌ழ்‌க்கையை ம‌ட்டு‌ம் கொ‌ஞ்ச‌ம் ‌மி‌‌ச்ச‌ம் வையு‌ங்க‌ள்.

(08) உ‌ங்க‌ள் நெரு‌ங்‌கிய ந‌ண்ப‌ர்க‌ளி‌ன், உற‌வின‌ர்க‌ளி‌ன் குறைகளை‌ப் ப‌ற்‌றி எ‌ப்போது‌ம் சொ‌ல்லா‌‌தீ‌ர்க‌ள். இதனா‌ல் அவ‌ர்க‌ள் ‌மீது உ‌ங்க‌ள் காதல‌ர்/காத‌லி‌க்கு தவறான அ‌பி‌ப்ராய‌ம் ஏ‌ற்ப‌ட்டு‌விட‌க் கூடு‌ம்.மேலு‌ம், நீ‌ங்க‌ள் எ‌ல்லாவ‌ற்றையு‌ம் கூ‌றிய ‌பி‌ன்னரு‌ம், ம‌ற்றவ‌ர் ஏது‌ம் கூறாம‌ல் இரு‌ந்தா‌ல் அதனா‌ல் ஒரு ஏமா‌ற்ற‌ம் ‌ஏ‌ற்படு‌ம். நா‌ம்தா‌ன் ஏதோ தவறு செ‌ய்து‌வி‌ட்டோமோ எ‌ன்ற கவலை உ‌ங்களை‌ வா‌ட்ட‌த் து‌வ‌ங்கு‌ம்.

(09) எனவே, ஆர‌ம்ப‌த்‌திலேயே ஒரு எ‌ல்லை‌க்கு‌ள் ‌நீ‌ங்க‌ள் இரு‌ந்தா‌ல் எ‌ப்போது‌ம் ‌சி‌க்க‌ல் இ‌ல்லை. எதையு‌ம் உள‌றி‌க் கொ‌ட்டாம‌ல், சி‌க்கலை ஏ‌ற்படு‌த்தாம‌ல், சுமூகமான உற‌வு ‌நிலவ நா‌ம் தா‌ன் எ‌ச்ச‌ரி‌க்கையாக இரு‌க்க வே‌ண்டு‌ம்.

(10) சொ‌ல்ல வே‌ண்டியதை ம‌ட்டு‌ம் சொ‌ல்வது, தேவை‌யி‌ல்லாதவ‌ற்றை சொ‌ல்‌லி மா‌ட்டி‌க் கொ‌ள்ளாம‌ல் இரு‌ப்பது, மு‌க்‌கியமான ‌விஷ‌ய‌ங்களை மறை‌க்காம‌ல் சொ‌ல்வது ‌நீ‌ண்ட கால உறவு‌க்கு ந‌ல்லது.



அறிந்து கொள்வோம்


தலைமுடியும் புற்றுநோயும்...

தலைமுடி உதிர்வோருக்கு புற்று நோய் ஏற்படக் கூடிய சாத்தியம் குறைவாகக் காணப்படுவதாக அண்மைய மருத்துவ ஆய்வொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

30 வயதளவில் முடி உதிரும் ஆண்களுக்கு புற்று நோய் ஏற்படக் கூடிய சாத்தியம் மிகவும் குறைவாகக் காணப்படுவதாக அமெரிக்க மருத்துவ ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

2000 ஆண்களிடம் வொஷிங்டன் மருத்துவ கல்லூரி ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வின் மூலம் இந்தத் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. குறைந்த வயதில் முடி உதிரும் ஆண்களுக்கு புற்று நோயின் தாக்கங்கள் குறைவாகவே காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 50 வயதை அடையும் ஆண்களில் அரைவாசிக்கும் மேற்பட்டவர்கள் முடி உதிர்வுப் பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.




IQ POWER

இங்கிலாந்து பல்கலைக்கழகம் மனிதர்களின் முளைத்திறன் (IQ Power) குறித்த ஆய்வில் ஈடுபட்டது. அப்போது பழக்க வழக்கங்களுக்கும், IQ திறனுக்கும் உள்ள தொடர்பை சோதித்தபோது புத்திசாலிகள் ஏமாற்றுவதை விரும்புவதில்லை என்று தெரியவந்தது.

ஆயிரக்கணக்கான டீன் ஏஜ் மற்றும் வயது முதிர்ந்தவர்கள் ஆய்வின்போது அனுபவ அடிப்படையில் சோதிக்கப்பட்டனர். அப்போது புத்திசாலிகள் (அதிகமான IQ. திறன் பெற்றிருந்தவர்கள்) பிறரை ஏமாற்றும் எண்ணம் இல்லாதவர்களாக இருந்தனர். அவர்கள் திறந்த மனதுடன் எண்ணங்களை வெளிப்படுத்துபவர்களாகவும், மற்றவர்களில் இருந்து விதிவிலக்காக அவசியமற்றவற்றை ஒதுக்குபவர்களாகவும் இருந்தனர். பாலியல் ரீதியிலும் விதிவிலக்காகவே உள்ளனர்.

இந்த விஷயங்களில் புத்திக்கூர்மையுள்ள பெண்களுக்கு சம்பந்தமில்லை. அவர்களிடம் இருந்து சாதகமான எந்த தடயங்களும் கிடைக்கவில்லை.

புத்திக்கூர்மை உடையவர்கள் எண்ணங்கள் பரிணாம வளர்ச்சி பெற்று புதுமையான சிந்தனை உடையவர்களாக இருந்தனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் திறந்த மனப்பான்மை உடையவர்கள் மற்றும் நாத்திகவாதிகளாக இருந்தது குறிப்பிடத்தக்கது





வலியில்ல ஊசி...

மனிதர்களின் நோய் குணமடைய உடலில் ஊசி மருந்து செலுத்தப்படுகிறது. இதனால் வலி ஏற்படும் என்பதால் ஊசி போட்டுக் கொள்ள குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவரும் அச்சப்படுகின்றனர்.இந்த அச்சத்தைப் போக்கி வலி இல்லாத வகையில் போடும் மருந்து ஊசியை ஜப்பானை சேர்ந்த விஞ்ஞானி ஒருவர் கண்டு பிடித்துள்ளார்.

இந்த ஊசிகள் கரையக்கூடிய பாலிமர் இழைகளால் தயாரிக்கப்பட்டது. இதை உடலில் குத்துவதன் மூலம் தோலின் அடிப்பகுதி சேதமடையாது. வலி ஏற்படாது.

இந்த மைக்ரோ ஊசிகள் 0.5 மி.மீட்டர் நீளமும், 0.3 மி.மீட்டர் அகலமும் கொண்டது. இந்த ஊசி அண்மையில் சோதனை செய்து பார்க்கப்பட்டது.


கண்ணா பின்னா தத்துவங்கள்..படித்ததில் பிடித்தது...

***************************************************************
நூல் எழுதறவங்களை நூலாசிரியர்னு சொல்வாங்க, கதை எழுதறவங்களை கதையாசிரியர்னு சொல்லுவாங்க, பேர் எழுதறவங்களை பேராசிரியர்னு சொல்வாங்களா?"

***************************************************************

யானையை எப்படி ஆட்டோவில் ஏற்றுவது ?
"பேண்டை கழட்டி விட்டு"
எலிபேண்டில் (ELEPHANT) இருந்து பேண்டை (PHANT) எடுத்து விட்டால் அது 'எலி" (ELE) ஆகி போய்விடும். அப்புறமா ஆட்டோவில் எளிதில் ஏற்றிவிடலாம்.

***************************************************************

Tea மாஸ்டர் Tea போடுரார்
பரோட்டா மாஸ்டர் பரோட்டா போடுரார்
Maths மாஸ்டர் கணக்கு போடுரார்
ஹெட் மாஸ்டரால மண்டைய போட முடியுமா?

***************************************************************

புள்ளிமான் உடம்பெல்லாம் புள்ளி இருக்கும்
கண்ணுக்குட்டி உடம்பெல்லாம் கண்ணு இருக்குமா

***************************************************************

ஒரு சிறந்த பேச்சாளர் எந்த ஸ்டேஜிலும் பேசலாம்
ஆனால் அவரால் COMA ஸ்டேஜில் பேசமுடியாது.

***************************************************************

1 பேப்பர் 2 நிமிஷம் எரிஞ்சா சாம்பல் ஆயிடும்...1 கட்டை 10 நிமிஷம் எரிஞ்சா சாம்பல் ஆயிடும்....1 மரம் 2 மணி நேரம் எரிஞ்சா சாம்பல் ஆயிடும்....

ஆனா.....


ஆனா.......

ஒரு பல்பு எவ்வளவு நேரம் எரிஞ்சாலும் சாம்பல் ஆகாது....

***************************************************************

காளை மாடு ஏன் புல் தின்னுகிறது ?
ஏனென்றால் அதுவே புல்தான் - Bull

***************************************************************

நைட்ல கொசு கடிச்சா குட் நைட் வைக்கலாம்...
ஆனா, பகல்ல கடிச்சா குட் மார்னிங் வைக்கமுடியுமா..???

***************************************************************

அண்ணனோட ஃப்ரண்ட அண்ணன்னு கூப்பிடலாம்..
அக்காவோட ஃப்ரண்ட
அக்கான்னு கூப்பிடலாம்..
ஆனா பொண்டாட்டியோட ஃப்ரண்ட
பொண்டாட்டிண்ணு கூப்பிடமுடியுமா..?!


***************************************************************

நடந்து போனாக் கால் வலிக்கும். ஆனா கால் வலிச்சா நடக்க முடியுமா?

முயற்சி பண்ணா நடக்கும்ங்கறது உண்மைதான். அதுக்காக என்ன முயற்சி பண்ணாலும் பாம்ப நடக்க வைக்க முடியுமா??

***************************************************************

விசுவாசம் ....



ஒரு எஜமானருக்கு நல்ல சமையல்காரன் ஒருவன் இருந்தான்.

எஜமானருக்கு கத்தரிக்காய் என்றால் மிகவும் விருப்பம் என்பதைத் தெரிந்து கொண்ட சமையல்காரன், தினமும் கத்தரிக்காயைச் சமைத்துப் போட்டே தனது எஜமான விசுவாசத்தைக் காட்டிக்கொண்டிருந்தான்.

அவரும் சாப்பிட்டுக் கொண்டே இருந்தது மட்டுமல்லாமல் ஒரு நாள் கத்தரிக்காயைப் பற்றிப் புகழ்ந்து பேசினார்.

புகழ்ச்சியைக் கேட்ட சமையற்காரன்,,

ஆமாம் அய்யா, நீங்கள் சொல்வது சரிதான். காய்களிலே உசத்தியானது கத்தரிக்காய் தான் அதனால் தான், இயற்கையே அதற்கு கிரீடம் சூட்டியிருக்கிறது என்று தன் பங்கிற்கு புகழ்ந்து தள்ளினான்.

சிலநாட்களில் எஜமானருக்கு கத்தரிக்காய் சலித்துப் போய் விட்டது. இது தெரியாத சமையற்காரன் வழமை போல அன்றும் சமைத்து விட்டான்.



தட்டில் கத்தரிக்காயைப் பார்த்தவர் திட்டத் தொடங்கி விட்டார்.

திட்டியதைப் பார்த்ததும் தானும் சேர்ந்து ஆமாம் அய்யா...மோசமான காய் தான் அதனால் தானே, இயற்கையே அதன் தலையில் ஆணி அடித்து வைத்திருக்கிறது என்று ஒரே போடாகப் போட்டான்.

இப்போது எஜமானருக்கு ஒரே குழப்பம்,,,என்னடா அன்றைக்கு கிரீடம் என்றாய்...இன்றைக்கு ஆணி என்கிறாய்,,,இதில் எது உண்மை என்று கேட்டார்.

சமையற்காரன் சொன்னான்...என்னோட சம்பளத்தை கத்தரிக்காய் தரவில்லை. நீங்கள் தான் தருகின்றீர்கள் உங்களுக்குத் தான் விசுவாசமாக இருக்க வேண்டும் என்று கூலாகச் சொன்னான்.

கதையின் நீதி: விசுவாசத்தைக் காட்டுவதற்கு எப்படி வேண்டுமானாலும் மாற்றிப் பேசலாம்.( ஏதாவது ஏடாகூடமாக நடந்தால் அதற்கு நான் பொறுப்பில்லை நண்பர்களே!)

முயற்சி பண்ணா நடக்கும்ங்கறது உண்மைதான். அதுக்காக என்ன முயற்சி பண்ணாலும் பாம்ப நடக்க வைக்க முடியுமா??