நிலையை உயர்த்து... நினைப்பை உயர்த்தாதே...!



1) நானே பெரியவன், நானே சிறந்தவன் என்ற அகந்தையை (EGO) விடுங்கள்.

2) அர்த்தமில்லாமலும், பின் விளைவு அறியாமலும் பேசிக் கொண்டிருப்பதை விடுங்கள் (LOOSE TALKS).

3) எந்த விஷயத்தையும், பிரச்சனையையும் நாசுக்காக கையாளுங்கள் (DIPLOMACY), விட்டுக் கொடுங்கள்(COMPROMISE).

4) சில நேரங்களில் சில சங்கடங்களைச் சகித்துத்தான் ஆக வேண்டும் என்று உணருங்கள் (TOLERANCE).

5) நீங்கள் சொன்னதே சரி, செய்ததே சரி என்று வாதாடாதீர்கள், குறுகிய மனப்பான்மையை விட்டொழியுங்கள்(NARROW MINDEDNESS).

6) உண்மை எது, பொய் எது என்று விசாரிக்காமல் இங்கே கேட்டதை அங்கே சொல்வதையும், அங்கே கேட்டதை இங்கே சொல்வதையும் விடுங்கள் (CARRYING TALES).

7) மற்றவர்களை விட உங்களையே எப்போதும் உயர்த்தி நினைத்து கர்வப்படாதீர்கள் (SUPERIORITY COMPLEX).

8) அளவுக்கதிகமாய், தேவைக்கதிகமாய் ஆசைப்படாதீர்கள் (OVER EXPECTATION).

9) எல்லோரிடத்திலும், எல்லா விஷயங்களையும் அவர்களுக்கு சம்பந்தம் உண்டோ, இல்லையோ சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். (RELATIVENESS)

10) கேள்விப்படுகிற எல்லா விஷயங்களையும் நம்பிவிடாதீர்கள். (MERE BELIEVING)

11) உங்கள் கருத்துகளில் உடும்புப் பிடியாக இல்லாமல் கொஞ்சம் தளர்த்திக் கொள்ளுங்கள் (FLEXIBILITY).

12) அற்ப விஷயங்களைப் பெரிதுபடுத்தாதீர்கள்.

13) மற்றவர் கருத்துக்களை, செயல்களை, நடக்கின்ற நிகழ்ச்சிகளைத் தவறாக புரிந்து கொள்ளாதீர்கள் (MIS-UNDERSTANDING).

14) மற்றவர்களுக்கு மரியாதை காட்டவும், இனிய இதமான சொற்களைப் பயன்படுத்தவும் தவறாதீர்கள் (COURTESY).

15) புன்முறுவல் காட்டவும், சிற்சில அன்புச் சொற்களை சொல்லவும் கூட நேரமில்லாதது போல் நடந்து கொள்ளாதீர்கள்.

16) பேச்சிலும், நடத்தையிலும் பண்பில்லாத வார்த்தைகளையும் தேவையில்லாத மிடுக்கையும் காட்டுவதை தவிர்த்து அடக்கத்தையும் பண்பையும் காட்டுங்கள்.

17) அவ்வப்போது நேரில் சந்தித்து மனம் விட்டு பேசுங்கள்.

18) பிரச்சனைகள் ஏற்படும் போது அடுத்தவர் முதலில் இறங்கி வரவேண்டும் என்று காத்திருக்காமல் நீங்களே பேச்சை துவக்க முன் வாருங்கள்.

19) நிலையை உயர்த்து; நினைப்பை உயர்த்தாதே.

20) விட்டுக் கொடுப்பவன், கெட்டுப் போவதில்லை.


(நன்றி - நண்பன் ஹரூன்...)

நகரில் எத்தனை காகங்கள்...? அக்பரின் கேள்வியும்...பிர்பலின் புத்திசாலித்தனம்..





பேரரசு அக்கபர் தன் அவையில் உள்ளோரிடம் புதிர்கள் மற்றும் விடுகதைகளை கேட்டு மடக்குவார்... எப்போதும் அவர் எப்போதும் நூதனமான கேள்விகளையே கேட்டு மற்றவர்களை மடக்குவார். அவரின் கேள்விகளிற்கு பதிலளிக்கவேண்டுமானால் நிறைய ஜோசிக்கவேண்டியிருக்கும்...

அதே போல் ஒருநாள் அக்பர் தன் அவையோரிடம் ஒரு கேள்வியை கேட்டார்... அவரின் கேள்வியால் அவையோர் வாயடைத்துப்போனார்கள். அவர் அப்படி என்னதான் கேட்டார்...விடயளிப்போரை தேடி அக்க்பரின் தலை அவை சுற்றி வந்தது...அவையோரோ விடை தெரியாமல் தலை குனிந்து இருந்தனர்...

அந்த நேரம் பார்த்து பீர்பால் அவையுள் நுழைந்தார்...பீர்பால் மன்னரைபற்றி நன்கு அறிந்தவர் அவருக்கு நிலைமை விளங்கி விட்டது... பீர்பால் அக்பரை பார்த்து கேட்டார்..மன்னா கேள்வி என்ன என்று நான் அறியலாம..நானும் கொஞ்சம் முயன்று பார்கிரேனே...

அக்பர் கேட்டார்..."இந்த நகரத்திலே எத்தனை காக்கைகள் உள்ளன?..."



கொஞ்சம் கூட தாமதிக்காமல் பீர்பால் சொன்னார்.."மகராஜா இந்த நகரத்திலே ஐம்பதாயிரத்தி ஐநூற்றி எண்பத்தி ஒன்பது காகங்கள் உள்ளன.."




அக்பர் கேட்டார்.."அதை எப்படி உன்னால் துல்லியமாக கணிக்க முடிந்தது..இது சரியான பதில்தான...?"

பீர்பால் சொன்னார்.."ஆம் மன்னா இது சரியான கணக்குதான்..வேண்டுமானால் உங்கள் ஆட்களை விட்டு எண்ணச்சொல்லுங்கள்... நான் சொன்ன கணக்கைவிட அதிக காகங்கள் இந்த நகரத்திலே காணப்பட்டால் அவை வேறு இடங்களில் இருந்து தமது உறவினரை பார்க்க வந்த விருந்தாளிக்காகங்களாக இருக்கும் அப்படி இல்லாமல் நான் சொன்ன கணக்கைவிட குறைவான காகங்கள் இருந்தால் எமது நகர காகங்கள் சில / பல தமது உறவினரை பார்க்க வேறு இடங்களிற்கு போயிருக்கலாம்...

மன்னர் அக்பர், பிர்பலின் இந்த புத்திசாலித்தனமான பதிலால் மிகவும் சந்தோசப்பட்டார்...


MORAL : A witty answer will serve its purpose.

உடுரவணன் Colombo போய்ட்டாருங்கோ...மனைவிக்கோ உயிரு போய்ட்டுதுங்கோ....



உடுரவணன் அலுவலக விடயமாக தலைநகர் வந்தார்.. வந்து இறங்கியவுடன் தொலைபேசியில் தான் பத்திரமாக Colombo வந்த விடயத்தை மனைக்கு சொல்ல அழைத்தார். இனி நடந்தது உரையாடல் வடிவில்...



டிரிங் டிரிங் மறுமுனை தூக்கப்பட்டவுடன்...

உடுரவணன்: யார் பேசுறது...

(அழைப்பை எடுத்ததோ வீட்டு வேலைக்காரன்...)

வேலைக்காரன்: வீட்டு வேலைக்காரன் அய்யா...

உடுரவணன்: அம்மா எங்கே...?

வேலைக்காரன்: மாடியில் அய்யாவோட தூங்கிகிட்டிருக்காங்க அய்யா...

உடுராவணன்: என்ன...அய்யாவோடயா..? அட மடையா நான்தான்ட அம்மாவோட புருஷன்... இன்னைக்குத்தான் Colombo வந்தேன் அதுக்குள்ளய...?

வேலைக்காரன்: அய்யா நான் இப்ப என்ன செய்யட்டும்...?

உடுரவணன்: அலுமாரியை திறந்துபார் உள்ளே துப்பாக்கி ஓன்று இருக்கும் அதை எடுத்துக்கொண்டு போய் இருவரையும் சுட்டு விட்டு வந்து சொல் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று நான் சொல்லுகிறேன்...




கொஞ்ச நேர நிசப்த்தத்தின் பின் இரு வேட்டு சத்தங்கள் கேட்டது... அதன் பின்னர்...

வேலைக்காரன்: ஆம், சுட்டுவிட்டேன் அடுத்து என்ன செய்யட்டும்...

உடுராவணன்: வெரி குட்.. வீட்டின் பின்னுள்ள கதவைத்திறந்து இரண்டுபேரையும் பின்னாலுள்ள நீச்சல்தடாகத்துள் வீசு வேலை முடிந்தது..




வேலைக்காரன்: ஆனால் அய்யா இந்த வீட்டில் நீச்ச்ல்தடாகம் ஒன்றும் இல்லையே...

உடுராவணன்: என்ன...? நீச்சல்தடாகம் இல்லையா...???

வேலைக்காரன்: ஆம் அய்யா இங்கு அப்படி ஒன்றும் இல்லை...

உடுராவணன்: Sorry Wrong நம்பர்!!!!!!!!!


உடுராவணன் Microsoft ஐரோப்பிய தலைமை நிறைவேற்று அதிகாரியாக....

மைக்ரோசாப்ட் ஐரோப்பிய தலைமை நிறைவேற்று அதிகாரியை தேர்ந்தெடுக்க மைக்ரோசாப்ட் தலைவர் பில்கேட்ஸ் தகுதியானவர்களை ஒரு walk in interview இற்கு அழைப்பு விடுத்தார்.... கிட்டத்தட்ட 5000 பேர் அந்த நிகழ்விற்கு வருகை தந்திருந்தனர். அவர்களில் இலங்கை சேர்ந்த உடுரவணனும் அடக்கம்... வருகை தந்த அனைவரும் ஒரு பாரிய அரங்கத்தினுள் அமரவைக்கப்பட்டனர்.

நேர்முக தெரிவை நடத்த மைக்ரோசாப்ட் தலைமை நிறைவேற்று அதிகாரி பில்கேட்ஸ் அவர்களே நேராக களத்தில் இறங்க முடிவெடுத்தார். அரங்கத்தினுள் நுழைந்த பில்கேட்ஸ் தலை சுற்றிபோனார்... அவ்வளவு கூட்டம்.



முதலில் பில்கேட்ஸ் வருகை தந்த அனைவருக்கும் நன்றி கூறி Java Programming மொழி இந்த பதவிக்கு மிக முக்கியமான ஒரு தேவை எனவே Java தெரியாத அன்பர்களை அரங்கை விட்டு வெளியேறுமாறு பணித்தார். கிட்டத்தட்ட 2000௦௦௦ பேர் அரங்கை விட்டு வெளியேறினார்கள். இதில் ஒரு முக்கியமான விடயம் எங்கள் உடுராவனனிட்கும் அந்த Programming மொழி தெரியாது இருப்பினும் அங்கு இருப்பதால் அவன் எதையும் இழக்கப்போவதில்லை இருந்துதான் பார்ப்போமே என்று நினைத்து தொடர்ந்து அங்கே இருக்க முடிவெடுத்தான்...

பில்கேட்ஸின் அடுத்த பணிப்பு...இங்கு மிச்சம் இருக்கும் வேட்பாளர்களில் 100க்கு மேற்பட்ட பணியாளர்களை முகாமை செய்வதில் அனுபவம் இல்லாதவர்களை வெளிச்செல்லக்கோரினார். அடுத்த 2000 பேர் அரங்கை விட்டு வெளியேறினர். இங்கும் எங்கள் உடுராவனனுக்கு பிரச்சனை இதுவரை யாரையும் முகாமை செய்வதில் அனுபவம் இல்லாத ஒரு கீழ்மட்ட நபர் எங்கள் உடுராவணன். எது எப்படியோ என்னதான் நடக்கிறது பார்ப்போம் என்ற மனநிலையில் தொடர்ந்து அங்கேயே இருக்க முடிவெடுத்தான்.

அடுத்து எஞ்சி இருப்பவர்களில் முகாமைத்துவ பட்டம் அற்றவர்களை வெளியேறும் படி பணித்தார் பில்கேட்ஸ். என்சியுள்ளவர்களில் 500 பேர் வரையில் அரங்கை விட்டு வெளியேறினர். எங்கள் உடுராவணன் 15 வயதிலேயே பள்ளிக்கூடத்திற்கு மட்டம் போட்ட ஒரு நபர்... எப்படியிருப்பினும் இருந்துதான் பார்ப்போமே என நினைத்து தொடர்ந்து அங்கேயே இருக்க முடிவு செய்தான் எங்கள் உடுரவணன்.

இறுதியாக பில்கேட்ஸ் சொன்னார் இங்கே மிச்சம் இருக்கும் போட்டியாளர்களில் Serbo-Croatian or Serbo-Croat மொழி தெரியாதவர்கள் தயவு செய்து வெளியே செல்லவும்... மிச்சம் இருந்தவர்களில் 498 பேர் அரங்கை விட்டு வெளியே சென்றனர். எஞ்சியதோ இருவர்.... அருண் அவனும் ஒரு இலங்கையன் தனக்குதானே சொல்லிக்கொண்டான்...எனக்கு Serbo-Croat ஒரு வார்த்தை கூட தெரியாது...எதற்கும் இருந்துதான் பார்ப்போமே...

நேர்முக தெரிவின் இறுதிக்கட்டம்...பில்கேட்ஸ் மேடையிலிருந்து இறங்கி எஞ்சியிருந்த இருவரிடமும் வந்து... வாழ்த்துக்கள் இங்கு வருகை தந்த அத்தனை பேரில் நான் எதிர்பார்க்கும் எல்லா திறமையும் உங்கள் இருவரிடம் மட்டுமே உள்ளது இருபினும் இந்த பதவிக்கு ஒருவரை மட்டுமே நியமிக்க முடியும்...எனவே நீங்கள் இருவரும் Serbo-Croat மொழியில் உரையாடுங்கள்... அதை கேட்டபின் உங்களில் யாரை தெரிவு செய்வது என்று நான் முடிவெடுப்பேன்...


கொஞ்ச நேரம் நிசப்தம்....


அதன் பின் நடந்த உரையாடலை எங்கள் உடுராவணன் மற்றும் அருனின் தாய்மொழியிலே தரவேண்டும்...

எந்தவித பதட்டமும் இல்லாமல் எங்கள் உடுராவணன் மற்ற வேட்பாளரை நோக்கி...Kohomada Machan ? / கொஹோமட மச்சான்? (எப்படி மச்சான்?)என்று சிங்களத்தில் வினவினான்...

இதை கேட்ட மற்ற வேட்பாளர் விடையளித்தான்... Ammatta Udu... Umbath Sinhalada ??...Me Yakata (Bill Gate) pissu machang ..... அம்மட்ட... உடு...உம்பத் சிங்களத? மே யகட்ட பிசு மச்சாங்... (அம்மா..சோறு... நீயும் சிங்களம...இந்தாளுக்கு பைத்தியம் மச்சான்) என சிங்களத்தில் சொன்னானே பாருங்கள்...


பஞ்சாப் சர்தார்ஜி = இலங்கை உடுராவணன்...(UDURAWANA)


சர்தார்ஜி ஜோக்ஸ்!..

சர்தார்ஜியின்மருத்துவம்...


ஒரு ஊர்ல ஒரு சர்தார் நாட்டு வைத்தியரா இருந்து அட்டகாசம் பண்ணிக்கிட்டு
இருந்தார்.. அப்போ திடீர்ன்னு ஒரு அதிசய டாக்டர் அந்த ஊருக்கு வந்துட்டாரு..
எதை வேணாலும் குணமாக்குவேன்.. யாரை வேணாலும் சுகமாக்குவேன்னு கலக்க
ஆரம்பிச்சுட்டாரு.. சர்தாருக்கு யாவாரம் படுத்துடிச்சு.. என்னென்னமோ பண்ணிப்
பார்த்தாரு.. வேலைக்கு ஆகலே..!

ஒரு நாள் மாறு வேஷம் போட்டுக்கிட்டு அதிசய டாக்டர்கிட்டெ போயி " டாக்டர்
அய்யா..! எனக்கு எதை தின்னாலும் ருசியே தெரிய மாட்டேங்குது.." அப்படின்னாரு..
எந்த மருந்து குடுத்தாலும் குணமாகலேன்னு சொல்லி அதிசய டாக்டர் பேரை ரிப்பேர்
ஆக்கலாம்ன்னு அவர் திட்டம்.

அதிசய டாக்டருக்கு என்ன பண்றதுன்னு தெரியலே.. ரொம்ப நாழி யோசிச்சார்.. அப்புறம்
உதவியாள்கிட்டே " யப்பா.. அந்த 43 ம் நம்பர் ஜாடியை எடு" ன்னாரு.. அதில இருந்த
லேகியத்தை நிறையா வழிச்சு சர்தார் வாய்க்குள்ள அப்புனாரு..

சர்தார் கொஞ்சம் தின்னு பாத்துட்டு, "தூ... தூ... இது எருமை சாணி.." அப்படின்னு
கோபமா கத்தினாரு.. உடனே அதிசய டாக்டர்.. " அட.. உங்களுக்கு ருசி தெரிய
ஆரம்பிச்சுருச்சி" ன்னாரு..!

சர்தார் அதிசய் டாக்டர் கேட்ட காசை குடுத்துட்டு தலைய தொங்க போட்டுக்கிட்டே
திரும்பிட்டாரு.. இருந்தாலும் அவருக்கு தோல்வியை ஒப்புக்க மனசு இல்லே..
மறுபடியும் ஒரு முயற்சி பண்ணலாம்ன்னு ஒரு வாரம் யோசிச்சாரு..

அப்புறம் அதிசய டாக்டர்கிட்டே போயி " டாக்டர்.. எனக்கு பழசெல்லாம்
மறந்துடிச்சு.. ஒன்னுமே ஞாபகத்துக்கு வர மாட்டேங்குது.." அப்படின்னாரு.. இப்ப
அதிசய டாக்டருக்கு குழப்பம்.. என்ன சொன்னாலும் இந்தாளு நினைவு இல்லேம்பான்..
என்னத்த சொல்லி சமாளிக்கறதுன்னு யோசிச்சுட்டே இருந்தாரு.. சர்தாருக்கு
மனசுக்குள் சந்தோஷம் மாலை கட்டிகிட்டு இருந்துச்சு..

திடீர்ன்னு அதிசய டாக்டர், உதவியாள்ட்ட.." அந்த 43-ம் நம்பர் ஜாடியை எடு"
ன்னாரு.. அப்ப கெளம்பி ஓடுனவர்தான் இந்த சர்தார்.. எங்க போனாருன்னு இன்னமும்
தெரியலே...!!

சர்தார்ஜியும் Volks
Wagon காரும்...

ஒரு சர்தார் Wolks Vagon கார் ஒன்றை வாங்கினார். அதில் எஞ்சின் பின்புறம் இருந்தது அவருக்கு தெரியாது. ஒருநாள் காரில் போகும்போது கார் பழுது பட்டுப் போயிற்று. முன்புறம் திறந்து பார்த்தவருக்கு எஞ்சினைக் காணவில்லை என்று ஒரே அதிர்ச்சி. அப்போது அதே மாடல் கார் ஒன்றை ஓட்டிக்கொண்டு சர்தார் மாதவ் சிங் வந்தார். விஷயத்தைக் கேள்விப் பட்டதும் சொன்னார்..

கவலைப்படாதே.. என் டிக்கியில் ஸ்பேர் எஞ்சின் இருக்கு.. எடுத்துக்கோ..!

விமானப்பயணம் செய்யும் சர்தார்...

சர்தார் புனேயிலிருந்து சண்டிகர் செல்லும் விமானத்தில் ஏறுகிறார். மூன்று சீட் உள்ள வரிசையில் அவருக்கு நடுவில் இருந்த சீட் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் ஜன்னலோரம் இருந்த சீட்டில் உட்கார்ந்து கொண்டார். அது ஒரு வயதான பெண்மணிக்கு ஒதுக்கப்பட்டிருக்க, அந்தப் பெண்மணி தன்னுடைய சீட்டை தனக்கு விட்டுத்தருமாறு கேட்கிறார்.

சர்தார் : அதெல்லாம் முடியாது. நான் வெளியே வேடிக்கை பாத்துக்கிட்டுதான் வருவேன். ஜன்னலோரம் உட்கார்ந்தாதான் அது முடியும்.

பெண்மணி : (பணிப்பெண்ணிடம்) எனக்கு என் சீட்டை ஒதுக்கிக் கொடுங்க. இந்த ஆள் டார்ச்சர் பண்றான்.

பணிப்பெண் : சார் தயவுசெய்து இவுங்களுக்கு அந்த சீட்டைக் கொடுத்து உங்க சீட்டுல உட்காருங்க.

சர்தார் : அதெல்லாம் முடியாது. நான் வெளியே வேடிக்கை பாத்துக்கிட்டுதான் வருவேன். ஜன்னலோரம் உட்கார்ந்தாதான் அது முடியும்.

விமான துணை கேப்டன் : சார் தயவுசெஞ்சி சீட்ட விட்டுக்கொடுங்க சார். கெஞ்சிக் கேக்கிறேன் சார்.

சர்தார் : அதெல்லாம் முடியாது. நான் வெளியே வேடிக்கை பாத்துக்கிட்டுதான் வருவேன். ஜன்னலோரம் உட்கார்ந்தாதான் அது முடியும்.

கேப்டன் வருகிறார். நடந்த விபரங்களைக் கேட்கிறார். சர்தார்ஜியின் காதில் மெதுவாக எதையோ கூறுகிறார். அதிர்ந்துபோன சர்தார் தன்னுடைய சீட்டுக்கு மாறிக்கொள்கிறார்.

ஆச்சரியமடைந்த மற்றவர்கள் கேப்டனிடம் தனியே சென்று என்ன சொன்னீர்கள் எனக் கேட்க, அவர் பதிலளிக்கிறார். "ஒன்னுமில்லை ஜெண்டில்மென்… நடுவுல இருக்கற சீட் மட்டும்தான் சண்டிகர் போகும். மற்ற சீட்கள் எல்லாம் குஜராத் போகும்னு சொன்னேன். அவ்வளவுதான்."




நண்பரை பார்க்க சென்ற சர்தார்...

நம்ம சர்தார் அவருடைய நண்பரைப் பார்க்கச் சென்றிருந்தார். பேசிக் கொண்டிருந்துவிட்டு விடை பெறும் நேரம் கடும் மழை பிடித்துக் கொண்டது. நண்பர் சொன்னார்.. மழை பெய்யறதப் பாத்தா இப்போதைக்கு நிக்காது போலருக்கு சிங்கு. அதனாலே தங்கிட்டு காலேல போ..

சர்தாரும் ஒப்புக்கொண்டார். சற்று நேரத்தில் சர்தார் திடீரென மழையில் நனைந்து கொண்டே தெருவில் இறங்கி ஓடினார்..கொஞ்ச நேரத்தில் தொப்பலாக நனைந்து கொண்டே திரும்பினார்..

நண்பர் கேட்டார்.." எங்கே சிங்கு நனைஞ்சுக்கிட்டே ஓடினே..?'

சர்தார் சொன்னார்.. " எப்படியும் இங்கே தங்குறதுன்னு முடிவாயிருச்சி.. அதான் என் வீட்டுக்குப் போய் சொல்லிட்டு வந்தேன்.. ராத்திரிக்கு வரமாட்டேன்னு...!

மருமகன் சர்தார்......

ஒரு பணக்கார மாமியாருக்கு 3 மருமகன்கள்.. அவளுக்கு தன் மருமகனெல்லாம் தன் மேல எவ்வளவு அன்பா இருக்காங்கன்னு தெரிஞ்சிக்க ஆசையா இருந்தது.. ஒரு நாள் மூத்த மருமகனை அழைச்சுக்கிட்டு படகுப் பிரயாணம் போனாள்.. நடுவழியிலே தண்ணிக்குள்ளே தற்செயலா விழுந்தது போல விழ, மருமகன் பாய்ஞ்சு காப்பாத்திட்டாரு.

மறுநாள் அவர் வீட்டு வாசல்லே ஒரு புத்தம் புது மாருதி கார் நின்னுட்டுருந்தது.. அதன் கண்ணாடியில் ஒரு அட்டை ஒட்டப்பட்டிருந்தது.. " மாமியாரின் அன்புப் பரிசு.."

ரெண்டாவது மருமகனுக்கும் இந்த சோதனை நடந்தது.. அவரும் ஒரு மாருதி கார் வென்றார்.." மாமியாரின் அன்புப் பரிசாக..".

மூன்றாவது மருமகனோ oru சர்தார் அவருக்கும் இந்த சோதனை நடந்தது.. அவர் கடைசி வரை காப்பாத்தவே இல்ல.. மாமியார் கடைசியா பரிதாபமா 'லுக்கு' உட்டப்ப சொன்னான்.. "போய்த் தொலை.. எனக்கு கார் வேணாம்.. சாவுற வரைக்கும் சைக்கிள்ல போயிக்கிறேன்..பொண்ணா வளர்த்து வச்சிருக்க..?" மாமியார் செத்துட்டுது..

மறுநாள் அவன் வீட்டு வாசல்லே ஒரு பளபளக்கும் பாரின் கார் நின்னுச்சு.." மாமனாரின் அன்புப் பரிசு" என்ற அட்டையோட...!



Reference : அங்கேயும்... இங்கேயுமாக... நெட்டில் சுட்டது..