ஈமெயில் அதிஸ்டம்

மிச்ச நாளா ஒரு doubt... எனக்கு ஒரு நாளுக்கு எப்படியும் மூன்று அல்லது நாலு ஈமெயில் வரும் இதை இத்தனை பேருக்கு forward பண்ணினா நல்ல நியூஸ் வரும் இல்ல பணம் வருமெண்டு... நானும் நினைவு தெரிஞ்ச காலமா forward பண்ணுகிறான் எனக்கெண்டா ஒன்றும் வந்த மாரி தெரியல்ல. எங்கட IT Dept இல இருந்துதான் ரெண்டு மூணு warnings வந்திச்சு. என்ன செய்யிறது எனக்கும் தெரியும் இது ஒரு தலையிடி என்று, பாழப்போன மனசு இப்படியான குருட்டு சாத்திரங்களையும் நம்பிறதால எனக்கும் தவிர்க்க பயம், வேற வழி இல்லாம நானும் எனக்கு தெரிஞ்சவங்க அறிஞ்சவங்க எல்லாருக்கும் பிடிச்சு CC பண்ணி அனுப்பிப்போட்டு அடுத்த மெயிலுக்கும் அதிஷ்டதுக்கும் பார்த்து கொண்டிருக்கிறது வழமையபோச்சு. அப்பிடியான mails அனுப்பேக்குள்ள எனக்கு அனுப்பினவருக்கும் CC பண்றது வழமை, அப்பதானே இது தொடராது என்று நான் நினைக்கிறனான் அனால் நடக்கிறதோ வேற மாரி. அடுத்த சில நாட்களில இல்ல சில சமயம் அதே நாளில திரும்பவும் எனக்கு வரும். நானும் விடாம திரும்பவும் அனுப்புவன், இது ஏதோ சண்டை போல தொடர்ந்து நட்க்கும். அது சரி போங்கப்பா இதெல்லாம் அரசியல்ல சகாஜம்ன்னு நானும் போய்டே... இருப்பன் . ஒரு நாள் எனக்கு இப்படியான மெயில் அனுப்பினவரிட்ட நேர reply போட்டு கேட்டன் எப்ப இப்படியான mails அனுப்பிறதா எப்ப நிப்பாட்ட போறீங்கன்னு, அதுக்கு வந்திச்சே ஒரு reply...கிழே பார்க்கவும்...

Quote

நானும் வாற mails அ avoid பண்ணி பாத்தன்.. அதனால தான் luck இல்லையோ என்டு தோனிச்சு சொ தொடங்கிடம்ல... அவங்கள நிப்பாட்ட சொல்லுங்கோ நான் நிப்பாடுறன்...

Unquote

அது சரி, உன் குற்றமா... என் குற்றமா ... யாருக்கிட்ட போய் நான் சொல்ல.

இதையெல்லாம் விட வரும்பாருங்க சில mails உதவி கேட்டு, forward பண்ணினா சர்வீஸ் provider 10 cents.. 20 cents தருவாங்கன்னு , என்ன கொடுமை சரவணன் இது.... அதெல்லாம் உண்மையோ பொய்யோ தெரியாது, forward பண்ணலேன்னா சாமி கண்ண குத்தும் ....

எவ்வளவுதான் technology வளர்ந்தாலும் மனித மனம் மாறுமா......?

வாசிச்சன்...சிரிச்சன்...2

வாசிச்சன் , சிரிச்சன் தொடர்ச்சி ......










































சின்ன அட்வைஸ் "மனம் விட்டு சிரித்தால்... நோய் விட்டு விலகும் "

வர்ட்டா ...பிரதர்

வாசிச்சன்...சிரிச்சன்...

படித்ததில் , பார்த்ததில் .... பிடித்தது



நல்ல ஜோக்ஸ், யாம் பெற்ற சிரிப்பு பெறுக என் சுற்றமும் ...

புத்தக கண் காட்சி - 2009

எப்பிடி எல்லாம் சுகமா இருக்கிறியளோ , என்ன எனக்குதான் கொஞ்ச நாளா நாரிகுள்ள கடுப்பு. சும்மா சொல்லபடாது ஓட்டமேண்ட அப்பிடி ஒரு ஓட்டம் . நாயிக்கு வேலையும் இல்ல இருக்க நேரமும் இல்ல கணக்கா அங்கயும் இங்கயும் ஓடினதில டயர் தெஞ்சதும் நாரி பிடிப்பும் தான் மிச்சம் . அது சரி போன கிழமை நடந்த புத்தக கண்காட்சிக்கு போனீங்களே ? எனக்கெண்டா உண்மைய நேரம் இல்ல, இருந்தும் சும்மா அங்க என்ன நடக்கெண்டு பார்ப்பம் எண்டு ஒரு எட்டு போய் பார்த்தன் . சும்மா சொல்ல கூடாது, எங்கட பிள்ளையளுக்கு கண்காட்சி, கார்னிவல் எண்டா நல்ல சுதிதான். புத்தகம் வாங்க வந்தாக்கள விட வாங்கிறத பார்க்க வந்தாக்கள்தான் கூட. பெற்றார் பிள்ளையளோட வந்தாலும் வாங்கிறது என்னவோ அப்பாவும் அம்மாவும் தான். அதுவும் சரிதான் அவங்களுக்குத்தானே தெரியும் பிள்ளைக்கு என்ன வேணுமெண்டு. இருந்தாலும் பிள்ளை ஆசைபட்டு கேட்டு வாங்கி குடுத்த பிள்ளைக்கும் சந்தோசம் பெற்றார்க்கும் சந்தோசம்தானே. அது சரி விசயத்துக்கு வருவம், எனக்கென்னவோ சகோதர மொழி புத்தகங்கள் தான் கூட கண்ணில பட்டது . அவயல்ட கடைகளும் கூடத்தானே . புத்தக கடைகளைவிட சாப்பாட்டு கடைகள்தான் கூடபோல இருக்கு, அதான் எங்கட சனம் புத்தக கண்காட்சி எண்டு ஜோசிக்காம கார்னிவல் எண்டு நினைச்சினம் போலயிருக்கு . நூடில்ஸ் கடைகளும், சோடா கடைகளும், டீ கடைகளும் தான் கூட. திரும்பின பக்கமெல்லாம் நூடில்ஸ் சாபிட்ட வெற்று பாத்திரங்கள். எப்ப தான் எங்கட சனம் குப்பை தொட்டியின் பயன் அறியுமோ. வெளிய வரைக்குள்ள நிறையபேற்ற கையில புத்தக கட்டுகளைவிட நூடில்ஸ் பெட்டிகள்தான் கூட இருந்திச்சு. எது எப்படியோ, எல்லாம் சுபமா பிரச்சினை ஒண்டும் இல்லாம நல்லூர் கந்தண்ட அருளால முடிஞ்சுபோச்சு , என்ன எனக்கு ஒரே கவலை நானும் ஓன்று ரெண்டு புத்தகங்கள் வாங்குவம் எண்டு இருந்த தமிழ் கடைகள்ள தேடி தேடிப் பார்த்தன் ஒன்றும் கிடைக்கல ஸ்டாக் இல்லையாம்.... அடுத்த வருஷம் பார்ப்பம், கெதியா போக வேணும் ......

வாழ்க்கையில முன்னேற சில படிகள் - ரிச்சர்ட் மோரன்

பயனுள்ள தகவல், வாழ்வு முன்னடைவதும் பின்னடைவும் எங்கள் கையில்தான்

WORKING as a business consultant all over the world, I have discovered some basic career-related rules that everyone should know but many don't.

ü Business is made up of ambiguous victories and nebulous defeats. Claim them all as victories. எப்படிங்க முடியும்

ü Keep track of what you do; someone is sure to ask. உண்மைதான் எல்லாரும் கிளருவாங்க

ü Be comfortable around senior managers, or learn to fake it. தமிழில சொன்ன படம் காட்டனும்

ü Never bring your boss a problem without some solution. அப்புறம் பாஸ் எதுக்கு

ü You are getting paid to think, not to whine. எனக்கும் மூளை இருக்கு

ü Long hours don't mean anything; results count, not effort. நிஜம் தான் சும்மா சம்பளம் தரமாடங்க

ü Write down ideas; they get lost, like good pens. அதுக்கு பேனா தொலயமா இருக்கணும்

ü Always arrive at work 30 minutes before your boss. எங்கட பாஸ் என்னைவிட அரமணி முன்னுக்கு வந்திருவார்

ü Help other people network for jobs. You never know when your turn will come. யாரும் இருந்த எனக்கும் நல்ல ஒரு வேல தாங்கப்பா

ü Don't take days off sick unless you are. அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா

ü Assume no one can / will keep a secret. பாஸ் தொடர்பான ஒப தூப பேசப்படாது

ü Know when you do your best morning, night, under pressure, relaxed; schedule and prioritize your work accordingly. நாங்க நல்ல வயிறு முட்ட சாப்பிடு தூங்க தான் லாயக்கு

ü Treat everyone who works in the organization with respect and dignity, whether it be the cleaner or the managing director. Don't ever be patronizing. அப்ப யாருக்கு பிலிம் காடுறது

ü Never appear stressed in front of a client, a customer or your boss. Take a deep breath and ask yourself: In the course of human events, how important is this? அப்பிடின்ன ஒவொரு நிமிசமும் மூச்ச நல்ல இழுங்க

ü If you get the entrepreneurial urge, visit someone who has his own business. It may cure you. பில் கேட்ஸ் எனக்கு நல்ல தெரியும் பட் அவருக்கு என்ன தெரியாது

ü Acknowledging someone else's contribution will repay you doubly. அட ச்சே முதலே தெரியாம போச்சு

ü Career planning is an oxymoron. The most exciting opportunities tend to be unplanned. கால் போன போக்கில போறவங்களுக்கு சாரி

ü Always choose to do what you'll remember ten years from now. கொலை... பத்து வருஷம் உள்ள...

ü The size of your office is not as important as the size of your pay cheque. அதான் சின்ன கம்பெனில வேல பார்கிறவங்க ஜாலியா இருகாங்க

ü Understand what finished work looks like and deliver your work only when it is finished. ஒரு போதும் நடக்காது போல இருக்கு

ü The person who spends all of his or her time is not hard-working; he or she is boring. வேல செயேறதே போரின்

ü Know how to write business letters including thank-you notes as well as proposals. விட்ட கடிதமென்ன கட்டுரையே எழுதுவம்

ü Never confuse a memo with reality. Most memos from the top are political fantasy. ஒரு நாளைக்கு எத்தின மெமோ எல்லாம் அரசியல்

ü Eliminate guilt. Don't fiddle expenses, taxes or benefits, and don't cheat colleagues. எல்லாரும் நோட் பண்ணுங்கப்பா

ü Reorganizations mean that someone will lose his or her job. Get on the committee that will make the recommendations. ஷோர்ட சொன்ன சோப்பு போடுகிறது இல்ல வால் பிடிக்கிறது

ü Job security does not exist. செக்யூரிட்டி வேல செயிரவருக்கும் தான்

ü Always have an answer to the question, What would I do if I lost my job tomorrow அடுத்த நாள் நடுத்தெரு

ü Go to the company Christmas party. Don't get drunk at the company Christmas party. குடிக்க தானே நம்ம சனம் பார்ட்டிக்கு போறது

ü Avoid working at weekends. Work longer during the week if you have to. ஒ ஒ நல்ல ரெஸ்ட் எடுக்கணும்

ü The most successful people in business are interesting. அவங்களுக்கு உள்ள கஷ்டம் அவங்களுக்குதான் தெரியும்

ü Sometimes you'll be on a winning streak and everything will click; take maximum advantage. When the opposite is true, hold steady and wait it out. எங்க ச்டேஅடி எல்லாம் தடுமாறுது...

ü Never in your life say, It's not my job இருக்கிற வேலையே செய்ய கானம் அதுக்குள்ளே அடுத்ததா

ü Be loyal to your career, your interests and yourself. எப்படீங்க முடியும்...அது ஏலாத காரியம்

ü Understand the skills and abilities that set you apart. Use them whenever you have an opportunity. எங்கட ஆற்றல், தெறமை வேற...ம்ம்

ü People remember the end of the project. As they say in boxing, Always finish stronger than you start. நல்ல முடிஞ்சா நான் இல்லண்ட அவங்க

அனைவருக்கும் பயனுள்ளதாய் இருந்திருக்கும் என நம்பிறன் - அன்புடன் யசோ

P Préservons notre planète et n'utilisons le papier qu'à bon escient.

Save a tree...please don't print this e-mail unless you really need to




This e-mail is confidential. It may also be legally privileged. If you are not the intended recipient or have received it in error, please delete it and all copies from your system and notify the sender immediately by return e-mail. Any unauthorized reading, reproducing, printing or further dissemination of this e-mail or its contents is strictly prohibited and may be unlawful. Internet communications cannot be guaranteed to be timely, secure, error or virus-free. The sender does not accept liability for any errors or omissions.

தீவிரமாக யோசிப்போர் சங்கம்

தாங்க முடியல

  1. செருப்பு இல்லாம நாம நடக்கலாம் ஆனா,நாம இல்லாம செருப்பு நடக்க முடியாது.( தீவிரமாக யோசிப்போர் சங்கம். எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது)
  2. இட்லி மாவை வச்சு இட்லி போடலாம்.சப்பாத்தி மாவை வச்சு சப்பாத்தி போடலாம்.ஆனா,கடலை மாவை வச்சு கடலை போட முடியுமா?( ராவெல்லாம் முழ்ச்சு கெடந்து யோசிப்போர் சங்கம்)
  3. என்னதான் மனுசனுக்கு வீடு, வாசல், காடு, கரைன்னு எல்லாம் இருந்தாலும், ரயிலேறனும்னா,ப்ளாட்பாரத்துக்கு வந்துதான் ஆகனும். இதுதான் வாழ்க்கை.
  4. பஸ் ஸ்டாப் கிட்ட வெய்ட் பண்ணா பஸ்ஸு வரும்.ஃபுல் ஸ்டாப் கிட்ட வெய்ட் பண்ணா ஃபுல்லு வருமா?
  5. என்னதான் பொண்ணுங்க பைக் ஓட்டினாலும்,ஹீரோ ஹோன்டா, ஹீரோயின் ஹோன்டா ஆய்டாது!!அதேமாதிரி,என்னதான் பசங்க வெண்டைக்காய் சாப்பிட்டாலும், லேடீஸ் ஃபிங்கர், ஜென்ட்ஸ் ஃபிங்கர் ஆய்டாது!!!
  6. பஸ் ஸ்டாண்ட்ல பஸ் நிக்கும்.ஆட்டோ ஸ்டாண்ட்ல ஆட்டோ நிக்கும்.சைக்கிள் ஸ்டாண்ட்ல சைக்கிள் நிக்கும்.ஆனா...கொசுவத்தி ஸ்டாண்ட்ல கொசு நிக்குமா?யோசிக்கனும்.....!!
  7. இஞ்ஜினியரிங் காலேஜ்ல படிச்சா இஞ்ஜினியர் ஆகலாம்.ஆனாபிரசிடன்சி காலேஜ்ல படிச்சா பிரசிடன்ட் ஆக முடியுமா?
  8. ஆட்டோக்கு 'ஆட்டோ'ன்னு பேர் இருந்தாலும்,மேன்யுவலாத்தான் டிரைவ் பண்ண முடியும்.
  9. தூக்க மருந்து சாப்பிட்டா தூக்கம் வரும், ஆனா இருமல் மருந்து சாப்பிட்டா இருமல் வராது!(என்ன கொடுமை சார் இது!?!)
  10. பல்வலி வந்தால் பல்லை புடுங்கலாம்,ஆனா கால்வலி வந்தால் காலை புடுங்க முடியுமா?இல்லை தலைவலி வந்தால் தலையைதான் புடுங்க முடியுமா?(டேய்! எங்க இருந்துடா கிளம்புறீங்க?!)
  11. சன்டே அன்னைக்கு சண்டை போட முடியும்,அதுக்காக,மன்டே அன்னைக்கு மண்டைய போட முடியுமா?(ஐயோ! ஐயோ!! ஐயோ!!! காப்பாத்துங்க!!!)
  12. பில் கேட்ஸோட பையனா இருந்தாலும்,கழித்தல் கணக்கு போடும்போது,கடன் வாங்கித்தான் ஆகனும்.
  13. கொலுசு போட்டா சத்தம் வரும்.ஆனா,சத்தம் போட்ட கொலுசு வருமா?
  14. பேக் வீல் எவ்வளவு ஸ்பீடா போனாலும்,ஃப்ரன்ட் வீல முந்த முடியாது.இதுதான் உலகம்
  15. T Nagar போனா டீ வாங்கலாம்.ஆனால்விருது நகர் போனா விருது வாங்க முடியுமா?
  16. என்னதான் பெரியவீரனா இருந்தாலும்,வெயில் அடிச்சா,திருப்பி அடிக்க முடியாது.
  17. உங்கள் உடம்பில்கோடிக்கணக்கான செல்கள் இருந்தாலும்,ஒரு செல்லில் கூடஸிம் கார்ட் போட்டு பேச முடியாது.
  18. ஓடுற எலி வாலை புடிச்சாநீ 'கிங்'குஆனா...தூங்குற புலி வாலை மிதிச்சாஉனக்கு சங்கு.
  19. நிக்கிற பஸ்ஸுக்கு முன்னாடி ஓடலாம்ஆனாஒடுற பஸ்ஸுக்கு முன்னாடி நிக்க முடியாது.
  20. வண்டி இல்லாமல் டயர் ஓடும்.ஆனால்...டயர் இல்லாமல் வண்டி ஓடுமா?இது மல்லாக்க படுத்துகிட்டு யோசிக்க வேண்டிய விஷயம்.
  21. சைக்கிள் ஓட்டுறது சைக்கிளிங்னா, ட்ரெய்ன் ஓட்டுறது ட்ரெய்னிங்கா? இல்ல பிளேன் ஓட்டுறது பிளானிங்கா?

இன்றைய நவீன தமிழ் மங்கையரைப் பற்றி

1. உங்களையெல்லாம் பெத்தாங்களா , இல்லை ஆர்டர் குடுத்து செஞ்சாங்களா 2. கற்காலத்துல இருக்கற மாதிரி காதுல இவ்வளவு பெரிய வளையம் மாட்டிட்டு திரியரீங்களே , இதென்ன விட்ட குறை தொட்ட குறை மாதிரி போன ஜென்மத்து தொடர்பா ?
3. முன் மண்டையின் காலியான இடத்தை மறைக்க நாங்க படாதபாடு படும்போது நீங்க அழகான நீளமான முடியை ஒரு சாணுக்கு வெட்டிக்கறீஙகளே , அது ஏன் ?
4. தேவையே இல்லைன்னாலும் நல்லா இருக்குல்லன்னு ஒன்னுக்கும் உதவாத ஒரு டெடி பியரை கையில் வைத்துக் கொண்டு நீங்கள் பண்ணும் கெட்ட அலப்பறையில் சாப்பிடக் கூப்பிட்டு வந்த மாடு அதை வாங்கிக் குடுக்குதே , அது ஏன்?
5. எப்போ கேட்டாலும் டயட்ன்னு சாலட் மட்டும் சாப்பிட்டு எப்படி உயிரோட இருக்கீங்க ? தனியா போயி அன்லிமிடெட் மீல்ஸ் ஒரு கட்டு கட்டிட்டு வந்துடுவீங்களா?
6. எப்பவும் கையில ஒரு ஆங்கில புத்தகத்தை வைச்சிட்டு திரியரீங்களே , உண்மையா அதை படிக்கறீங்களா , இல்லை யாருகிட்டையாவது கதை கேட்டுக்குவீங்களா ?
7. ஸ்கூலுக்கு போகும் சமயத்தில் எடுத்தது மாதிரியான பத்தாத ட்ரெஸ் அதிகமா போடறீங்களே , நீங்க ரொம்ப கஞ்சமா ???
8. நோ மாம், ஐ ஆம் ஸ்டண்டிங் இன் தி புளிய மரத்து நிழல்ன்னு சரளமா தமிழையும் ஆங்கிலத்தையும் கலந்து கொத்து பரோட்டா போடறீங்களே , தனியா கோர்ஸ் போவீங்களா ???
9. அரை மணி நேரத்துக்கு ஒரு தடவை ஓடிப் போய் மேக்கப் பண்ணிட்டு வர்றீங்களே , நீங்க உங்க பாட்டிக்கு தங்கச்சி மாதிரி இருக்கிற விஷயம் வெளிய தெரிஞ்சுரும் அப்படிங்கற பயத்திலயா ?
10. எப்பவும் கால்ல ஸ்டூல் போட்டுட்டு நடக்கறிங்களே , இந்த மாதிரி எவனாவது ஏடாகூடமா கேட்டா அடிக்கறதுக்கா ?பெண்ணியவாதிகள் யாரவது வந்து என்னை கும்முவதற்க்குள் ஐ ஆம் தி எஸ்கேப் !!!

இன்றைய நவீன தமிழ் மங்கையரைப் பற்றிய இந்த கேள்விகளுக்கு யாருக்காவது விடை தெரிஞ்சா சொல்லுங்களேன் . இதை யார்கிட்டையாவது நேரே கேட்டா எனக்கு புத்தூர் மற்றும் தெலுங்கு பாளையம் அட்ரஸ் விசாரிக்கும் நிலை வந்துடும்ன்னு பயந்துதான் இங்க போட்டுருக்கேன் .