ஈமெயில் அதிஸ்டம்

மிச்ச நாளா ஒரு doubt... எனக்கு ஒரு நாளுக்கு எப்படியும் மூன்று அல்லது நாலு ஈமெயில் வரும் இதை இத்தனை பேருக்கு forward பண்ணினா நல்ல நியூஸ் வரும் இல்ல பணம் வருமெண்டு... நானும் நினைவு தெரிஞ்ச காலமா forward பண்ணுகிறான் எனக்கெண்டா ஒன்றும் வந்த மாரி தெரியல்ல. எங்கட IT Dept இல இருந்துதான் ரெண்டு மூணு warnings வந்திச்சு. என்ன செய்யிறது எனக்கும் தெரியும் இது ஒரு தலையிடி என்று, பாழப்போன மனசு இப்படியான குருட்டு சாத்திரங்களையும் நம்பிறதால எனக்கும் தவிர்க்க பயம், வேற வழி இல்லாம நானும் எனக்கு தெரிஞ்சவங்க அறிஞ்சவங்க எல்லாருக்கும் பிடிச்சு CC பண்ணி அனுப்பிப்போட்டு அடுத்த மெயிலுக்கும் அதிஷ்டதுக்கும் பார்த்து கொண்டிருக்கிறது வழமையபோச்சு. அப்பிடியான mails அனுப்பேக்குள்ள எனக்கு அனுப்பினவருக்கும் CC பண்றது வழமை, அப்பதானே இது தொடராது என்று நான் நினைக்கிறனான் அனால் நடக்கிறதோ வேற மாரி. அடுத்த சில நாட்களில இல்ல சில சமயம் அதே நாளில திரும்பவும் எனக்கு வரும். நானும் விடாம திரும்பவும் அனுப்புவன், இது ஏதோ சண்டை போல தொடர்ந்து நட்க்கும். அது சரி போங்கப்பா இதெல்லாம் அரசியல்ல சகாஜம்ன்னு நானும் போய்டே... இருப்பன் . ஒரு நாள் எனக்கு இப்படியான மெயில் அனுப்பினவரிட்ட நேர reply போட்டு கேட்டன் எப்ப இப்படியான mails அனுப்பிறதா எப்ப நிப்பாட்ட போறீங்கன்னு, அதுக்கு வந்திச்சே ஒரு reply...கிழே பார்க்கவும்...

Quote

நானும் வாற mails அ avoid பண்ணி பாத்தன்.. அதனால தான் luck இல்லையோ என்டு தோனிச்சு சொ தொடங்கிடம்ல... அவங்கள நிப்பாட்ட சொல்லுங்கோ நான் நிப்பாடுறன்...

Unquote

அது சரி, உன் குற்றமா... என் குற்றமா ... யாருக்கிட்ட போய் நான் சொல்ல.

இதையெல்லாம் விட வரும்பாருங்க சில mails உதவி கேட்டு, forward பண்ணினா சர்வீஸ் provider 10 cents.. 20 cents தருவாங்கன்னு , என்ன கொடுமை சரவணன் இது.... அதெல்லாம் உண்மையோ பொய்யோ தெரியாது, forward பண்ணலேன்னா சாமி கண்ண குத்தும் ....

எவ்வளவுதான் technology வளர்ந்தாலும் மனித மனம் மாறுமா......?

4 comments:

  1. //எவ்வளவுதான் technology வளர்ந்தாலும் மனித மனம் மாறுமா......? //

    மாறும். ஆனா மாறாது.

    ReplyDelete
  2. மாறாதையா, மாறாது.... மனமும் குணமும் மாறாது!

    ReplyDelete
  3. settings -> comments--> word verification க்கு no குடுங்க... ஒவ்வொரு முர கமெண்ட் குடுக்குறப்பயும் டார்ச்சர் பண்ணுது :-)

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள் வரவேற்கபடுகின்றன