கடவுள் இருக்கிறாரா இல்லையா?

அறிவியலுக்கு அனைத்திற்குமே ஆதாரம் வேண்டும்.

கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதைப் பற்றி முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாமின் சிறிய வயது பள்ளிக்கூட விவாதம் ....... அவரது ஆசிரியருடன்...

ஆசிரியர்: ஆக, கடவுள் இருப்பதை நீ நம்புகின்றாயா?

கலாம்: கண்டிப்பாக ஐயா

ஆசிரியர்: கடவுள் நல்லவரா?

கலாம்: சந்தேகமேயில்லை

ஆசிரியர்: கடவுள் அனைத்து சக்திகளும் பெற்றவரா?

கலாம்: ஆமாம்.

ஆசிரியர்: என்னுடைய தம்பிக்கு புற்றுநோயால் மரணம் வந்தது. அவன் கடவுளை மிகவும் நேசிப்பவன். கடவுளிடம் ஓயாமல் பிரார்த்தித்திருந்தான். நம்மில் பலர் உடல்நிலை சரியில்லாதவருக்கு நம்மாலான உதவிகளை செய்வோம். அப்படி செய்யாத எல்லாம் வல்ல கடவுள் நல்லவரா?

கலாம்: (மெளனம்)

ஆசிரியர்: உன்னால் பதில் சொல்ல முடியவில்லை இளைஞனே அப்படித்தானே? நாம் மறுபடியும் முதலிலிருந்து ஆரம்பிக்கலாம். கடவுள் நல்லவரா?

கலாம்: ஆம்.

ஆசிரியர்: சாத்தான் நல்லவனா?

கலாம்: இல்லை.

ஆசிரியர்: சாத்தான் எங்கிருந்து வந்தான்?

கலாம்: (தயக்கத்துடன்) கடவுளிடமிருந்து

ஆசிரியர்: ரொம்ப சரி. இந்த உலகத்தில் கெட்டது இருக்கிறதா?

கலாம்: ஆமாம்.

ஆசிரியர்: கெட்டது எங்கும் நிறைந்திருக்கிறது இல்லை? கடவுள்தானே அனைத்தையும் படைத்தார்?

கலாம்: ஆமாம்.

ஆசிரியர்: ஆக, கெட்டவற்றை படைத்தது யார்?

கலாம்: (பதிலில்லை)

ஆசிரியர்: இந்த உலகத்தில் உடல்நிலைக் கோளறுகள், ஒழுக்கமின்மை, பழியுணர்ச்சி, மோசமான நிலை என அனைத்தும் உள்ளது தானே?

கலாம்: ஆம் ஐயா.

ஆசிரியர்: அப்போ, யார் இதையெல்லாம் உருவாக்கியது?

கலாம்: (பதிலில்லை)

— (இங்கிருந்து கவனமாக படியுங்கள்) —

ஆசிரியர்: உன்னைச் சுற்றியிருக்கும் உலகத்தை உணர்ந்து பார்க்க ஐந்து அடிப்படை உணர்வுகள் வேண்டும் என்று அறிவியல் கூறுகிறது. நீ கடவுளை கண்டிருக்கின்றாயா?

கலாம்: இல்லை ஐயா

ஆசிரியர்: எப்போதாவது கடவுளின் குரலை கேட்டிருக்கின்றாயா?

கலாம்: இல்லை ஐயா

ஆசிரியர்: எப்போதாவது கடவுளை தொட்டிருக்கிறாயா, இல்லை ருசித்துப் பார்த்திருக்கின்றாயா அல்லது மோப்பம் பிடிப்பதுபோல் முகர்ந்தாவது இருக்கிறாயா? ஏதேனும் ஒரு உணர்ச்சியில் கடவுளை உணர்ந்திருக்கின்றாயா?

கலாம்: இல்லை ஐயா

ஆசிரியர்: அப்படியிருந்தும் கடவுளை நீ இன்னமும் நம்புகின்றாயா?

கலாம்: ஆம்.

ஆசிரியர்: ஆக, அனுபவத்திலிருந்தும், ஆய்வுகளிலிருந்தும், சோதனை நடத்திக் காட்டக்கூடிய வழிகளிலிருந்தும் அறிவியல் உனது கடவுள் இல்லை என்று கூறுகிறது. நீ அதற்கு என்ன பதில் தருவாய் மகனே?

கலாம்: ஒன்றுமில்லை ஐயா. எனக்கு நம்பிக்கை மட்டும் உள்ளது.

ஆசிரியர்: ஆம் நம்பிக்கை. அறிவியலுக்கும் அதற்கும் நிறைய பிரச்சினை இருக்கிறது.

கலாம்: ஐயா, வெப்பம் இருக்கிறதா?

ஆசிரியர்: ஆமாம்.

கலாம்: அப்படியென்றால் குளிர் இருக்கிறதா?

ஆசிரியர்: ஆமாம்.

கலாம்: இல்லை ஐயா, குளிர் என்பது இல்லை.

(மாணவர்கள் இதுவரை சுவாரசியம் காட்டாமலிருந்தவர்கள் இப்போது இருவரையும்கூர்ந்து கவனிக்கின்றார்கள்)

கலாம்: ஐயா, நம்மிடம் பல்வேறு வகைப்பட்ட வெப்பம் இருக்கிறது, மிகு வெப்பம், தாழ் வெப்பம், குறைந்த வெப்பம், வெள்ளை வெப்பம், மிகப்பெரிய வெப்பம் அல்லது வெப்பமே இல்லை என்று. ஆனால் குளிர் என்ற ஒன்று கிடையாது. நம்மால் பூஜ்ஜியத்திற்கும் கீழே 458 டிகிரி வரை (வெப்பமே இல்லை) போக முடியும் அதற்கு மேல் அளவு இல்லை. குளிர் என்ற ஒன்று கிடையாது. குளிர் என்பது வெப்பம் இல்லாமையைக் குறிக்கும் ஒரு சொல் அவ்வளவே. குளிர் என்பது வெப்பத்தின் எதிர்ப்பதம் இல்லை வெப்பத்தின் தன்மை இல்லாமை அவ்வளவே.

கலாம்: சரி ஐயா, இருளைப் பற்றி கேட்கலாம். இருள் என்ற ஒன்று இருக்கிறதா?

ஆசிரியர்: கண்டிப்பாக. இருள் இல்லையென்றால் இரவு என்பது எப்படி இருக்கும்?

கலாம்: மறுபடியும் தவறு ஐயா. இருள் என்பது வெளிச்சம் இல்லாமை. உங்களால் குறைந்த வெளிச்சம், சாதாரண வெளிச்சம், பளிச்சிடும் வெளிச்சம், பிரகாசமான வெளிச்சம் என்று வரையறுக்க முடியும். ஆனால் வெளிச்சமே இல்லாததை? அதைத்தான் நீங்கள் இருள் என்று கூறுகின்றீர்கள் இல்லையா? இருளை இன்னமும் இருண்டுபோக உங்களால் செய்யமுடிந்தால் செய்வீர்கள்தானே?

ஆசிரியர்: என்ன சொல்லவருகின்றாய் மகனே?

கலாம்: நான் கூற வருவது உங்களின் அறிவியல் கூற்றில் பிழையிருக்கிறது என்பதுதான்.

ஆசிரியர்: என்ன பிழை? விளக்கமாக சொல் பார்க்கலாம்?

கலாம்: ஐயா, உங்களின் அறிவியல் இருமை தத்துவத்தை ஏற்றுக்கொள்கிறது. நீங்கள் வாழ்வும் சாவும் இருக்கிறது நல்ல கடவுள் கெட்ட கடவுள் என்று இருக்கிறதாகவும் வாதிடுகிறீர்கள். கடவுள் என்கிற விஷயத்தை நீங்கள் ஒரு ஆதாரபூர்வ (அளவெடுக்க முடிகின்ற) முடிவுபெற்ற விஷயமாக எதிர்பார்க்கின்றீர்கள். ஐயா, அறிவியலால் மனிதர்களின் எண்ணத்தை விளக்க முடியவில்லை. மின்சாரத்தையும் காந்தத்தையும் வைத்துதான் அளவிடுகிறது. ஆனால் இந்த இரண்டில் ஒன்றையும் அது உண்மையில் பார்த்ததோ முழுதுமாக புரிந்துகொண்டதோ இல்லை. இறப்பு என்பதை உயிரின் எதிர்ப்பதமாக பார்ப்பது இறப்பு என்பது ஒரு தனிப்பட்ட பொருளாக இருக்க முடியாது என்பதை மறந்துவிட்டுக் கூறுவது. இறப்பு என்பது உயிரின் எதிர்ப்பதம் இல்லை ஐயா, இறப்பு என்பது உயிரில்லாதது அவ்வளவே. இப்போது என் கேள்விக்கு விடைதாருங்கள் ஐயா. உங்களின் மாணாக்கர்களுக்கு மனிதன் குரங்கிலிருந்து வந்தான் என்று பாடம் நடத்துகின்றீர்கள் அல்லவா?

ஆசிரியர்: மனிதன் உருவான விதம் பற்றிய டார்வின் கூற்றைப் பற்றி நீ கூறுகின்றாய் என்றால் ஆம் நான் அதை நடத்துகின்றேன்.

கலாம்: மனிதன் உருவான விதத்தை நீங்கள் எப்போதாவது பார்த்திருக்கின்றீர்களா?

(ஆசிரியர் விவாதம் எங்கே போகின்றது என்பதை உணர்ந்து புன்சிரிப்புடன் தலையாட்டிக்கொள்கிறார்)

கலாம்: ஆக இதுவரை எவரும் மனிதன் உருவான விதத்தை ஆதாரபூர்வமாக கண்டதில்லை. அதுமட்டுமின்றி உயிரியல் மாற்றம் என்பது இன்னமும் நிகழ்ந்துகொண்டிருக்கின்ற ஒன்று என்பதையும் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கவில்லை. ஆக நீங்கள் உங்களின் கருத்துக்களைத்தான் பாடமாக நடத்துகின்றீர்கள் அப்படித்தானே? நீங்கள் ஆசிரியரா விஞ்ஞானியா?

(வகுப்பு முழுவதும் சலசலக்க ஆரம்பித்துவிடுகிறது)

கலாம்: இந்த வகுப்பில் இருக்கும் எவரேனும் நமது ஆசிரியரின் மூளையை பார்த்திருக்கின்றீர்களா?

(வகுப்பில் இப்போது சிரிப்பலை ஆரம்பித்துவிட்டது)

கலாம்: இங்கே இருக்கும் எவரேனும் ஆசிரியரின் மூளையை கண்டோ, கேட்டோ, தொட்டோ, உணர்ந்தோ அல்லது ருசித்தோ இருக்கின்றீர்களா? எவரும் அவ்வாறு செய்திருப்பதாக தெரியவில்லை. ஆகவே ஐயா, அனுபவத்திலிருந்தும், ஆய்வுகளிலிருந்தும், சோதனை நடத்திக் காட்டக்கூடிய வழிகளிலிருந்தும் அறிவியல் உங்களின் மூளை இல்லையென்று கூறுகிறது. தவறாயிருப்பின் மன்னித்துவிடுங்கள் ஐயா, நாங்கள் எவ்வாறு உங்களின் போதனைகளை நம்புவது?

(வகுப்பு அமைதியாகிவிட. ஆசிரியரின் முகம் இருண்டுவிட்டது)

ஆசிரியர்: எனக்கு மூளை இருக்கிறது என்பதை நீ நம்பித்தான் ஆகவேண்டும் மகனே…

கலாம்: அதேதான் ஐயா… மனிதருக்கும் கடவுளுக்கும் இருக்கும் ஒரே இணைப்பு அதுதான், நம்பிக்கை. அந்த நம்பிக்கைதான் நம் வாழ்வில் நம்மை வழிநடத்துகின்றது நாமனைவரையும் உயிருடனும் வைத்திருக்கின்றது.

நன்றி : http://tamil.sripauljoseph.com

ஆகா... Dr. அப்துல் கலாம் என்ன சொல்ல வருகிறார் .... கடவுள் என்கிற ஒரு மகா சக்தி உள்ளது.. இது மறுக்கவோ , மறைக்கவோ முடியாத உண்மை...

இப்பொழுது விளங்குகிறது எப்படி கலாம் ஒரு ராக்கெட் விஞ்ஞானி ஆனறேன்று... சிறு வயதிலேயே ஆசிரியரை இப்படி கலச்சிருக்கார் ... எங்களுக்கு எதோ அவர் சொன்னது போல கனவு மட்டும் காண முடியும்... வேற என்ன... முடியும்....??????!!!!!??????

ஊருக்கடி உபதேசம் உனக்கில்லை ...

சினிமா உலகில் சரி , அரசியல் உலகில் சரி பலரும் பஞ்ச் டயலாக் சொல்வதில் பிரசித்தி பெற்றவர்கள் . எப்படி இருக்கு இந்த பன்ச்....

"" ஆறு முழுவதும் போகுதாம் தண்ணி... பாத்ரூமுல குளிக்குதாம் பன்னி ....""

எனக்கும் மிச்ச நாலா நல்ல ஒரு மெசேஜ் இந்த உலகத்திற்கு விசேடமாக இளவட்டங்களிட்கு சொல்ல வேணும் என்று ஆசை. அதை எப்படி சொல்லுறது என்றுதான் ம்ம் ம்ம்ம் ... ( என்ன இன்னும் அந்த மெசேஜ் வரவே இல்லையே என்று அங்கே யாரோ கேட்கிறது எனக்கும் கேட்கிறது...)

""நீ இறந்த பிறகும் பெண்களை சைட் அடிக்கனுமா? கண்களை தானம் செய்.... "" (பாருங்கப்பா இப்படி ஒரு நல்ல செய்தியை எப்டியெல்லாம் சொல்ல வேண்டியிருக்கு) ... இதையும் கேட்கலென்ன இந்த உலகம் உருப்படுமா...

எவ்வ்ளோ கஷ்டம் வந்தாலும் லைஃப்ல ஒரு விஷயத்தை மட்டும் எப்பவுமே மறக்கக்கூடாது. ....சாரி அது என்னன்னு மறந்துபோச்சு. நாளைக்கு சொல்றேன் என்று இப்ப சொன்ன பிஞ்ச ஜோட்டாவால துரத்தி துரத்தி அடிப்பீங்கன்னு எனக்கு தெரியும்...சரி போனா போகுது சொல்லீருவம்...

""...வாழ்க்கையில் அன்பான உறவுகள் கிடைப்பது முக்கியமல்ல.... வாழ்நாள் முழுவதும் அவர்களுடன் அன்பாக இருப்பதே முக்கியம். ......""

கடைசியாக ஒன்னு...

நண்பா, என்னிடம் ஒரு நல்ல செய்தியும் ஒரு கெட்ட செய்தியும் இருக்கிறது. நல்ல செய்தி என்னவெனில் என்னிடம் எந்த கெட்ட செய்தியும் இல்லை. கெட்ட செய்தி என்னவெனில் என்னிடம் எந்த நல்ல செய்தியும் இல்லை. இது உனக்கு நல்ல செய்தியா? கெட்ட செய்தியா ????????? நீங்களே decide பண்ணுங்க ஆனா இப்போதைக்கு ஆளை விடுங்க... i'm எஸ்கேப்....

இந்த உலகம் ரொம்ப மோசம்....
. . .
. . .
. . .
. . .
. . .
. . .
. . .
. . .
. . .
. . .
. . .
. . .
. . . .
. . .
. . .
. . .
. . .
. . .
. . .
. . .
. . .
. . .
. . .
. . .
. . .
. . .
. . .
. . .
. . .
. . . .
. . .
. . .
. . .
. . .
. . .
. . .
. . .
. . .
. . .
. . .
. . .
. . .
. . .
. . .
. . .
. . .
. . . .
. . .
. . .
. . .
. . .
. . .
. . .
. . .
. . .
. . .
. . .
. . .
. . .
. . .
. . .
. . .
. . .
. . . .
. . .
. . .
. . .
. . .
. . .
. . .
. . .
. . .
. . .
. . .
. . .
. . .
. . .
. . .
. . .
. . .
. . . .
. . .
. . .
. . .
. . .

. . .
. . .
. . .
. . .
. . .
. . .
. . . .
. . .
. . .
. . .
. . .
. . . .
. . .
. . .
. . .
. . .
. . .
. . .
. . .
. . .
. .
. . .
. .
. . .
. .
. . .
. . .
. . .
. . .
....
. .
. . .
. . .
. . . .
. . . .
. . . .
. . . . .
. . . .
. . . .
. . . .
. . . .
. . . .
. . . .
. . .
. . . .
. . . .
. . . .
. . . . .
. . . . .
. . . .
. . . . . .
. . . .
. . . .
. . .
. . . .
. . .
. .
. . . .
. . . .
. . . .
. . . . .
. . . . .
. . . .
. . . . .
. . . . .
. . . . .
. . . .
. . . .
. . .


சரி விடுங்க. நீங்க scroll down பண்ணினா மட்டும், திருந்திடவா போகுது?!?

i'm Extremely சாரி... அடுத்த வாட்டி எங்கயாவது பார்த்தா என்ன அட்டிக்கலாமேன்னு மட்டும் இப்பவே decide பண்ண வேணாம்...நான் பாவம்....

வாசிச்சன் சிரிச்சன் - 3

கணவன் - மனைவி: நகைச்சுவைகள். சிரிக்காமல் தப்பிக்க முடியாது...யாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகமும் ...
______________________________________________________________
டாக்டர் : உங்க கணவருக்கு இப்ப ஓய்வு ரொம்ப முக்கியம்... இந்தாங்க தூக்க மாத்திரை
மனைவி: இதை எத்தனை தடவை கொடுக்கனும் அவருக்கு
டாக்டர்: இது அவருக்கு இல்லை...உங்களுக்கு
______________________________________________________________
மனைவி: ஏங்க என்கிட்ட உங்களுக்கு பிடிச்சது என் சிரிப்பா,கூந்தலா, என்கண்களா?? எதுங்க?
கணவன்: இப்படி சிரிக்காமலேயே சூப்பரா காமெடி பண்ணுறியே அதான்
புடிச்சுருக்கு ______________________________________________________________
மனைவி: நம்ம பையன் வளர்ந்து என்னவாக ஆசைப்படுறீங்க?
கணவன்: அவன் என்ன வேணும்னாலும் ஆகட்டும்...ஆனா யாருக்கும் புருஷனாமட்டும் ஆகக்கூடாது.... நான் பட்ட கஷ்டம் என்னோட போகட்டும்... ______________________________________________________________
மனைவி: ஏங்க.. சமையல்காரியை நிறுத்திட்டு இனி நானே சமைக்கிறேன்...எனக்குமாச எவ்வளவு சம்பளம் கொடுப்பீங்க?
கணவன்: உனக்கு எதுக்குடா சம்பளம்... நீ சமைக்க ஆரம்பிச்சுட்டேனா என்இன்சுரன்ஸ் பணம் மொத்தமும் உனக்குத்தானே...!______________________________________________________________
மனைவி: என்னங்க அதோ அங்க உக்காந்து தண்ணியடிக்கிறாரே அவரு என்னை பொண்ணு பார்க்க வந்தாரு, நான் அவரை கல்யாணம் பண்ணமாட்டேன்ன சொல்லிட்டேன். அத நினைச்சே அவரு இத்தனை வருஷமா தண்ணியடிக்கிறாரு.

கணவன்: அவன் கொடுத்து வச்சவன்... அந்த சந்தோஷத்தை இத்தனை வருஷமாகொண்டாடிட்டிருக்கானேன்னு தான் ஆச்சர்யமா இருக்கு. ______________________________________________________________
மனைவி: என்னங்க நான் செத்துப்போயிட்டா... என்ன பண்ணுவீங்க?
கணவன்: எனக்கு பைத்தியமே புடிச்சுரும்.
மனைவி: நான் செத்தா இன்னொரு கல்யாணம் பண்ணுவீங்களா?
கணவன்: பைத்தியம் என்ன வேணும்னாலும் பண்ணும். ______________________________________________________________
கணவன் மனைவிக்கு கார் கதவை திறந்து கொடுத்தால் அதற்கு மூன்று காரணங்களேஇருக்க முடியும்.
1. புது மனைவியாக இருக்கும்
2. புது காராக இருக்கும்
3. அந்த பெண் மனைவியாக இருக்க முடியாது. ______________________________________________________________

புயல் மழையில் ஒருவன் பிஸ்ஸா வாங்க கடைக்கு செல்கிறான்
கடைக்காரர் : சார் உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா...
வந்தவர்: பின்ன இந்த புயல் மழைல எங்க அம்மாவா என்னை பிஸ்ஸா வாங்கஅனுப்புவாங்க...!??______________________________________________________________
லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்:
கடவுள்: மனிதா உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்?
மனிதன்: இந்தியாவுலேர்ந்து அமெரிக்காவிற்கு ரோடு போட்டு கொடுங்க சாமி!!
கடவுள்: அது கஷ்டமாச்சே...வேறு ஏதாவது கேள்.
மனிதன்: அப்ப என் மனைவி பேச்சை குறைக்கணும், நான் சொல்றதை கேட்கனும்,எதையும் வாங்கிக்கேட்ககூடாது...
கடவுள்: அமெரிக்காவுக்கு ரோடு...track ... சிங்கிளா, டபுளா...?______________________________________________________________

முட்டுக்கட்டையான நிலை...முடிவற்ற தொடர்....(Deadlock - Infinite Loop)

அலுவலகத்தில்...

பாஸ்: அடுத்த கிழமை அவசரமான மீட்டிங் ஒன்று இருக்கு, நாங்க ரெண்டு பேரும் வெளி நாடு செல்லவேண்டி வரும்...
Secretary : சரி பாஸ், உடனடியாக ஒழுங்குகள் செய்யிறன்...

Secretary வீட்டில்...கணவனிடம்...

செச்றேடரி / மனைவி : இஞ்ச பாருங்கோ ஆபீஸ் அலுவல நானும் பொஸ்ஸும் அடுத்த கிழமை வெளிநாடு போறம்...வீட்டு வேலை எல்லாம் நீங்கதான் செய்யவேணும்...

கணவன்: சந்தோசமாக....சரி ...சரி...போய்டு வாங்கோ...எல்லாம் எனக்கு தெரியும் ....

மனைவி தூங்கியபின்... secretaryயின் கணவன்..தொலைபேசியில் தனது இரகசிய காதலியிடம்... இங்க பாரும் அடுத்த கிழமை என்ர wife ஆபீஸ் அலுவலா வெளி நாடு போற..நாங்க ஒரு கிழமை நுவரெலிய போவம்...சரியா...உங்கட கிளாஸ் எல்லாத்தையும் கான்செல் பண்ணும் சரியா...மிச்சத்தை நாளைக்கு கதைப்பம்...ok

அடுத்த நாள்... இரகசிய காதலி வீட்டில் ...

இரகசிய காதலி / ஆசிரியை : எனக்கு அடுத்த கிழமை ஒரு அவசரமான வேலை ஓன்று இருக்கு அதால நான் ஊருக்கு போகவேணும்..உங்கட personal கிளாஸ் எல்லாம் cancelled ...

அன்று மாலை....(பிஸியான தாத்தாவிடம்.... பேரன்)

சிறுவன்: தாத்தா...எங்கட டீச்சர் அடுத்த கிழமை எங்கட personal கிளாஸ் எல்லாம் கான்செல் பண்ணிப்போட்டா... நான் அடுத்த கிழமை உங்களோடதான் இருக்கப்போறன்...

தாத்தா : மிச்ச சந்தோசம்... சரி அடுத்த கிழமை எங்க போவம்....(உரையாடல் தொடர்கிறது...)

மறு நாள் காலை... அலுவலகத்தில்...பாஸ் secretary யிடம்...

பாஸ் / சிறுவனின் தாத்தா : Secretary ... இங்க பாரும் அடுத்த கிழமை என்ர பேரன் வீட்டுக்கு வாறன் அதால அடுத்த கிழமை இருந்த அந்த வெளிநாட்டு பிரயாணத்தை கான்செல் பண்ணிபோட்டு ஹெட் ஆபீஸ்க்கு உடனேயே அறிவிச்சு விடும்...

Secretary : சரி பாஸ் உடனேயே செய்யிறன்...

மதிய வேளை... secretary தனது கணவனிடம் தொலைபேசியில்...

Secretary: இஞ்ச பாருங்கோ..அடுத்த கிழமை boss இட பேரன் leave இல வீட்டுக்கு வாறானாம் அதால அந்த வெளிநாட்டு பயணம் cancel ... நீங்க வீட்டு வேலையிலிருந்து தப்பிச்சீங்க போங்கோ..

கணவன்: அவசரமாக...அப்படியே...சரி சரி நான் கொஞ்சம் busyயா இருக்கிறன் பிறகு உனக்கு கால் பண்றான்...

கணவன் உடனடியாக தனது இரகசிய காதலியிடம்...

கணவன் : நாசமாக போக... அந்த கிழட்டு பொஸ்ஸிட பேரன் எதோ leaveல வீட்டுக்கு வாறானாம், அதால என்ர wifeயிட வெளிநாட்டு பயணமும் cancelled ... அடுத்த கிழமை நாங்க பிளான் போட்டபடி நுவரெலிய போக முடியாது..பிறகு ஒரு நாள் பார்ப்பம்...sorry செல்லம்...

இரகசிய காதலி / ஆசிரியை : Thank God இப்பவே சொன்னீங்க...அநியாயம் எண்ட பர்சனல் கிளாஸ் எல்லாம் கான்செல் பண்ணீட்டன்... சரி ... சரி... என்ர studentsக்கு இப்பவே கால் பண்ணவேணும்...அப்ப நான் பிறகு உங்களுக்கு கால் பண்றான் சரியே...

ஆசிரியை / இரகசிய காதலி...தொலைபேசியில் தனது studentsக்கு....

ஆசிரியை : அடுத்த கிழமை இருந்த வேலை கான்செல் ஆகி போச்சு... உங்கட கிளாஸ் எல்லாம் வழமைபோல நடக்கும்... எல்லாரும் ஒழுங்க timeக்கு கிளாசிற்கு வரவேணும் சரியோ...

சிறுவன் / பேரன் தனது தாத்தாவிடம் தொலைபேசியில்...

சிறுவன் : தாத்தா...எங்கட டீச்சர் இப்பதான் போன் பண்ணி சொன்னவ அடுத்த கிழமை எங்கட கிளாஸ் எல்லாம் வழமைபோல நடக்குமாம்... நான் உங்களிட்ட சொன்னபோல அடுத்த கிழமை வரமுடியாது... I Miss You தாத்தா...

தாத்தா / பாஸ் தனது Secretaryயிடம்...

பாஸ்: செச்றேடரி... இங்க பாரும் அடுத்த கிழமை என்ர பேரனுக்கு கிளாஸ் எல்லாம் ஒழுங்க நடக்குமாம்... அதால, அவனால சொன்னதுபோல வரமுடியாதாம்...அப்ப அந்த வெளிநாட்டு பயணத்தை கான்செல் பண்ணவேண்டாம்...ticketsஐ confirm பண்ணும்... மறக்க வேண்டாம் எப்படியும் இன்னைக்கு வேலைய முடிக்க வேணும்.....

இது எங்க போய் முடியும்...முடிந்தால்...விளக்கம் சொல்லுங்களேன் பார்ப்பம்......

உலகில் காணப்படும் வினோத சட்டங்கள் 10 .......

அலட்சியம் பாதுகாப்பல்ல - குறிப்பாக நீங்கள் பிரயாணம் செல்லும் நாடுகளின் சட்டாங்களை அலட்சியம் செய்யும் பட்சத்தில் பாரிய நெருக்கடியான சூழ்நிலைக்கு வாய்ப்புகள் அதிகம். உலகின் கடினமான 10 சட்டங்கள் கீழே ....


10. புறாக்களிட்கு உணவிடவேண்டாம் - இத்தாலி


புறாக்களிட்கு உலகின் ௧0 வினோத குற்றம் ... இது கொஞ்சம் ஓவர். Venice நகரில், மனிதாபிமானம் பார்க்காமல் புறாக்களை விட்டு கொஞ்சம் விலகியிருங்கள் . இதை விட , நீர் ஓடைகளில் குதிப்பதும், ஷர்ட் அணியாமல் வீதிகளில் வருவதும், ரோடு ஓரங்களில் அமர்ந்து உணவு உண்பதும் தடை செய்யப்பட்டுள்ளது. எச்சரிக்கையில் தொடங்கி, தண்டமாக 50 - 600 $ வரை விதிக்கப்படலாம்.

9. பொது இடங்களில் உணவு , பாணம் அருந்துதல் ( அரபு இராச்சியம்) தடை


அரபு நாடுகளிற்கு ரமழான் காலங்களில் செல்வதை முடிந்தளவு தவிர்ப்பது நல்லது. அக் காலங்களில் பகல் வேளையில் பொது இடங்களில் உணவு உண்பதும், பாணங்கள் அருந்துவதும் முற்றாக தடை செய்யப்படுள்ளது. சில சுற்றுலா பிரயாணிகளிடம் 275.00 $ வரை தண்டம் அறவிடப்பட்ட சந்தர்ப்பங்களும் உண்டு. பொது இடங்களில் அன்பை வெளிப்படுத்தும் விதமாக நடந்து கொள்வதும் இக் காலங்களில் தடை செய்யப்பட்டுள்ளது, மீறினால் சில காலம் ஜெயில் வாசம் கிடைக்க வாய்ப்புகள் உள்ளது.


8. சில்லறைகளாக கொடுப்பனவு செய்வது தடை - கனடா



தெரு மூலைக் கடைக்கு ஓடிச்சென்று மிச்சமுள்ள சில்லறைகளை கொடுத்து எதாவது வாங்கலாம் என்று கனடாவில் கனவிலேனும் நினைக்கவேண்டாம். 10 $க்கு அதிகமாக ஏதும் பொருட்கள் வாங்கினால் முழுவதும் சில்லரையாக செலுத்துவது முடியாத காரியம். (1985 currency act). உங்களிற்கு பொருள் தருவதும், விடுவதும் கடைக்காரரின் கையில் உள்ளது.


7. கார்களை சுத்தமாக வையுங்கள் - moscow



அழகிய மொஸ்கோ நகரில் கழுவப்படாத காரில் பிரயாணம் செய்வது தடை செய்யப்படுள்ளது. தூசி படிந்த கண்ணாடி, இலக்க தகட்டை மறைக்கும் தூசி அல்லது அளுக்கு என்பன தடை. மீறினால் போலீசார் விதிக்கும் தண்டம் செலுத்தப்படவேண்டும். (போலீஸ்காரரிட்கு கையுட்டு கொடுத்து சமாளிப்பது உங்கள் தனிப்பட்ட திறமை)

6. ஒளிர விடப்படவேண்டிய முகப்பு விளக்கு - டென்மார்க்




டென்மார்க் நகரில் பகல் வேளைகளில் கூட வாகனங்களின் முகப்பு விளக்கு ஒளிர வேண்டும். மீறினால் தண்டமாக 100.00$ வரை செலுத்த நேரிடும்.

5. ஆடோபகான் வீதிகள் தரிக்க தடை - germany


வேக தடைகளற்ற ஆடோபகன் வீதியில் எவ்வித காரணம் காட்டியும் ஓடும் வாகனங்களை நிறுத்த முடியாது, இது சட்டப்படி குற்றம். அப்படியே தரித்தாலும் வீதியில் நடமாடுவது தடை. காரணம் உங்கள் உயிரை மட்டுமல்ல , ஏனைய வேகமா பிரயாணிக்கும் அனைவரின் உயிருக்கும் அச்சுறுத்தல் என்பதால்.

4. ஷர்ட் அணிவது கட்டாயம் - தாய்லாந்து



வீதிகளில் ஷர்ட் அணியாமல் வாகனங்கள் செலுத்துவது தாய்லாந்தில் தடை செய்யப்படுள்ளது. தலை கவசம் இல்லாவிட்டாலும் தப்பிக்கலாம், ஷர்ட் அணியவிட்டால் அம்பேல். தண்டமாக , எச்சரிக்கை அல்லது 10.௦௦$ வரை அறவிடப்படும் . போலீஸ் தொல்லை அதிகம்

3. வழி அனுப்புகையில் முத்தமிட தடை - பிரான்ஸ், இங்கிலாந்து


பிரான்ஸ் , இங்கிலாந்தில் 1910 , ஏப்ரல் , 5 காதல் இறந்த நாள். காதலர்கள் வழியனுப்புகையில் முத்தமிட்டபடி இருப்பதனால், ரயில்கள் தாமதமாக கிளம்பவேண்டிய சூழ்நிலை அமைந்ததால் இச் சட்டம் அமுல் படுத்தபட்டது. கொஞ்சம் பழைய சட்டமாக இருப்பதால் பிரான்சில் இச் சட்டம் கடுமையாக அமுலில் இல்லை. இருப்பினும் இங்கிலாந்தில் காதலர்கள் ரயில் நிலையத்திலுள்ள பிரத்தியோகமான இடங்களிற்கு செல்லுமாறு பணிக்கப்படுகின்றனர்.

2. உடலை மூடுதல் அவசியம் - கிரேனடா


கொஞ்சம் அவசியமான சட்டம்தான்...கிரேனடா கடல் கரைக்கு வரும் உல்லாச பிரயாணிகள் அவர்கள் அணிந்திருக்கும் நீச்சல் உடைகளுடன் கடை வீதிகளில் உலவுவதால் மற்றவர்கள் அசொவ்கரியங்களிட்குள்ளகின்றனர். இதனால் கொஞ்சம் கவலை அடைந்த அரசு போட்டிருக்கும் சட்டம் தான் இது. கடல் கரையை தாண்டிய பிரதேசத்தினுள் நீச்சல் உடையுடன் அலைந்தால் தண்டம் 270.௦௦$ செலுத்த வேண்டி நேரும்
1. ச்சுவிங்கம் (Chewing Gum) மெல்ல தடை - சிங்கப்பூர்

ச்சுவிங்கம் மெல்லும் பழக்கமுடையவர்கள் சிங்கப்பூர் காலடி வைக்க முன்னர் மறப்பது நல்லது. நகரை சுத்தமாக பேணும் நோக்கில் ச்சுவிங்கம் மெல்லுதல், பறவைகளிட்கு உணவிடுதல், பொது கழிவறைகளை சுத்தமாக பேனாதிருத்தல் போன்ற நடவடிக்கைகளிற்கு தண்டம் விதிக்கின்றது. சட்டப்படி மேல்லக்கூடியது "NICRORETTE" மட்டுமே, அதுவும் மருத்துவர் சான்றிதழுடன்.
பின்னர் வருந்துவதை விட உசாராக இருப்பது நல்லது, இனிமேலாவது நீங்கள் போக உள்ள நாட்டின் சட்டங்களை பற்றி கொஞ்சமாவது தெரிந்துகொள்ளுங்கள்....

ஊர் புதினம் - மஹா சக்தியின் செயல்...

கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டம் என்கிறது எமது முதுமொழிகள். அதுக்கினங்க குடி உள்ளதோ இல்லையோ கட்டாயம் ஊரில் ஒரு கோவிலாவது இருக்கவேணும் என்கிறது எமது நம்பிக்கைகள், அது ஒரு பாக்கம் இருக்க விடயத்திற்கு வருவோம்.



மட்டக்களப்பும் , கிழக்கு மாகாணமும் அம்மன் வழிபாட்டில் சிறப்பானவை . கல்முனை - பாண்டிருப்பு திரோவ்பத்தி அம்மன் கோவில் , புன்னைச்சோலை, ஆரயம்பதி கண்ணகி அம்மன் etc... இந்த வரிசையில் வந்தாறுமூலை கண்ணகி அம்மன் கோவிலும் பிரசித்தி பெற்றது.


இந்த கோவிலின் flash back காண பல நூறு ஆண்டுகள் முன் செல்ல வேண்டும் .... மதுரையை எரித்த ஆவேசத்துடன் கண்ணகி வந்து settle ஆனா இடம்தான் வந்தாறுமூலை அதாவது வந்து ஆறிய மூலை = வந்தாறுமூலை . இந்த கிராமம் இருப்பது மட்டக்களப்பின் வடக்கே சுமார் 9 - 10 km தூரத்தில் ( மட்டக்களப்பு - வாழைச்சேனை பிரதான வீதியில் ). அமைதி விரும்பிய கண்ணகி அம்மனின் விருப்பின்படி இந்த ஆலயத்தின் கதவுகள் திறந்து பூஜை இடம்பெறுவது வருடத்தில் ஒரு முறை மாத்திரமே .



அது சரி, இதையெல்லாம் இப்ப ஏன் சொல்ல வேண்டும் ? தொடர்ந்து வாசியுங்கள்...




கிழக்கில் வரட்சி தாண்டவமாடுகின்றது, வயல்கள் வறண்டு காணப்படுகின்றது , எங்கு பார்த்தாலும் நீர் பற்றாக்குறை . இது எப்படியெல்லாம் இருக்க, சில அதிசயங்கள் நடந்த வண்ணமே இருக்கின்றது . சில தினங்களிற்கு முன் தினசரியில் பார்த்த ஞாபகம் உயர்ந்த மேட்டு நிலத்தில் நீர் அருவியா ஓடுகிறதாம் (எங்கோ தம்பிலுவில் பக்கம் ). அதே போல இந்த ஆலயத்திலும் அதிசயங்கள் நடந்தவண்ணமே உள்ளது.




கோவிலின் முகப்பில் உள்ள கண்ணகி அம்மன் சிலையின் கண்களால் இரத்த கண்ணீர் ஓடியுள்ளதாம். இன்றும் இடது கண் வீங்கிய நிலையில் காணப்படுகின்றதாம்.


ஆலயத்தின் அருகில் உள்ள புளிய மரத்தில் இருந்து நீர் கசிந்து காணப்பட்டதாம்.


வருடத்தில் ஒரு முறை மட்டுமே திறக்கும் கோவில் உள்ளே, தினமும் சிலம்பு சத்தமும், உரல் இடிக்கும் சத்தமும் அடிக்கடி கேட்ட வண்ணமே உள்ளது . இந்த அதிசயத்தை காண பல இடங்களில் இருந்தும் பக்தர்கள் சாரி சாரியாக வந்த படி உள்ளனர்.



இது நல்ல சகுனமா அல்லது கெட்ட சகுனமா, ஊர் மக்களிடையே இன்னும் சந்தேகம் தீர்ந்தபாடில்லை.


எல்லாம் மஹா சக்தியின் செயல்....





P.S: இந்த அதிசயத்தை பார்க்க / கேட்க கிடைக்காதவர்களிட்கு ஒரு கொசுறு நியூஸ், பல ஊர் இளவட்டங்களின் மொபைல் போனில் இந்த அதிசயத்தை பார்க்க / கேட்க முடியும்... " மஹா சக்தியின் மகிமையை கையடககத்தினுள் கொண்டு வந்த டெக்னாலஜி".... உலகம் எங்கேயோ போயிடுச்சு....

இன்னைக்கு மழை வரும்..

முதல் நபர் : இன்னிக்கி 8 மணிக்கு மேல கடுமையான மழையும் காற்றும் வரும்னு டி.வி யில சொன்னாங்க.

இரண்டாம் நபர்: நீங்க கேட்டீங்களா?

முதல் நபர்: இல்லை ...இல்லை... அவங்களே சொன்னங்க

அடங்கு .. அடங்கு.. யாரப்பா அங்க கம்ப எடுக்கிறது... i'm எஸ்கேப்...