Super Singer Junior 2 - விஜய் TV

Super Singer Junior 02 , அதனது அடுத்த கட்டத்தினுள் பிரவேசிக்கிறது...

கடந்த வாரம் நடந்த Wildcard Round Selection இல் 06 குட்டீசுகள் தெரிவு செய்யப்பட்டு பொதுமக்கள் வாக்களிப்புக்கு அனுப்பட்டுள்ளனர். முதலில் 05 குட்டீசுகள் தெரிவு செய்யப்பட்ட நிலையில் எமது சின்ன சூப்பர் ஸ்டார் ஸ்ரீகாந்தும் பலரது வேண்டுகோளிட்கினங்க பொதுமக்கள் வாக்களிப்பிற்கு அனுப்பபட்டான்...இது ஒரு நல்ல செய்தி (எனக்கு)....

அது சரி பொதுமக்கள் வாக்களிட்புக்கு தெரிவானோர் யார்...

விஷ்ணு சரண்



பிரியங்கா



நித்யஸ்ரீ



ஸ்ரீநிஷா



ஸ்ரீஹரி



ஸ்ரீகாந்த




இவர்களில் உங்களை கவர்ந்தவர்களை தெரிவு செய்ய...

இந்தியாவில் உள்ள ரசிகர்கள் தங்களது செல்லிடப்பேசியில் இருந்து குறுஞ்செய்தி மூலம் வாக்களிக்க முடியும்...எவ்வாறு கீழ் வரும் முறையில் வாக்குகளை பதிவு செய்யுங்கள்...

SSJContestant No <> to 57827 for eg: SMS SSJ 01 to 57827. *charges are applicable

வெளிநாடுகளில் உள்ள ரசிகர்கள் கீழே உள்ள இணைப்பின்வழி சென்று தமது வாக்குகளை பதியலாம்...

http://vijay.indya.com/jss09/vote/vote.asp

பார்ப்போம் இறுதிப்போட்டியில் ஷ்ரவன், அல்க, ரோஷனுடன் போட்டிபோடப்போகும் அந்த சிறுகுரல் யாரென்று...

Super Singer Junior 2 - விஜய் TV

விஜய் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரி இரவு 09 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி "Airtel Super Singer Junior 02 " இந்த நிகழ்ச்சி இந்தியாவில் மட்டுமல்ல உலகெங்கும் பரந்திருக்கும் தமிழ் இதயங்களை கட்டிப்போட்ட நிகழ்ச்சி.

இந்த நிகழ்ச்சி 06 - 14 வயதிட்குடப்ட்ட சிறுவர்களுக்கான போட்டி நிகழ்வாக அமைகிறது. இந்த சிறுவர்களின் திறமை இசை உலகின் மாபெரும் காவியங்களால் மதிப்பிடப்படும். இந்த போட்டியில் வெல்லும் போட்டியாளருக்கு "Airtel Super Singer Junior 02" என்ற பட்டம் மட்டுமல்லாது 25 லட்சம் மதிப்புள்ள ஒரு அழகிய வீடும் பரிசாக அறிவிக்கப்பட்டுள்ளது...





இந்த போட்டிக்கு நடுவர்களாக...இவர்களை பற்றிய அறிமுகம் தேவையே இல்லை...

1 கலைமாமணி மனோ, இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என 20000 க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். இவர் பாடியதில் "சென்பகமே...முக்கால முகபுல...தில்லான தில்லான...அழகிய லைலா...போன்ற சூப்பர் டூப்பர் ஹிட் பாடல்களும் அடங்கும்.





02 சின்னக்குயில் சித்ரா - 06 தேசிய விருதுகள் பெற்ற தென் இந்திய பாடகி, (Nightingale of South India), புதிய பாடகர்களுக்கும், வளர்ந்து வரும் பாடகர்களுக்கும் இன்றும் ஒரு வழிகாட்டியாக இருக்கும் ஒரு இசைக் காவியம். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஒரிய ஹிந்தி, அஸ்ஸாமி, பெங்காலி மொழிகளிலும் பாடியுள்ளார்.





03 மால்குடி சுபா - இவர் இப்போட்டியின் மூன்றாவது நடுவர், இவர் சராசரியாக 1500 பாடல்களை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி மொழிகளில் பாடியுள்ளார்.



பல லட்சம் சிறுவர்களிலிருந்து வடிகட்டி இறுதி சுற்றுக்காக தெரிவு செய்யப்பட்டவர்கள் கீழ்வரும் நான்கு பேர்.

01 ஷரவன்,



02 ரோஷன்,



03 நித்தியஸ்ரீ



04 அல்க.



கால் இறுதி வரை வந்து அரை இறுதி சுற்றில் நுழைய முடியாமல் போன போட்டியாளர்கள்...

01 ஸ்ரீநிஷா:



02 பிரியங்கா:




03 பிரசன்னா சுந்தர்




என்னதான் இறுதி சுற்றுக்கு இவர்கள் வந்தாலும் ஒரு சில சுற்றுக்களுக்கு முன் வெளியேற்றப்பட்ட குட்டி பையன் ஸ்ரீகாந்த தான் பேர் என்னை பொறுத்தவரை ஜூனியர் சூப்பர் சிங்கர் - குட்டி பையன் பாடும் விதம், Stage Presentation சொல்ல வார்த்தைகளில்லை) Admiring littel Personality










இந்த நிகழ்ச்சியை விஜய் டிவி சார்பில் தொகுத்து வழங்குவது "திவ்யா". இவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதே தனி ரகம்..."Airtel Super Singer Junior 2 , தமிழகத்தின் செல்லக் குரலுக்கான தேடல்..." வேறு எவராலும் இவ்வளவு நளினமாக இதை உச்சரிக்க முடியுமா...தெரியவில்லை...



போட்டியாளர்களை வழி நடத்தி வேண்டிய பயிற்ச்சிகளை வழங்குபவர் திரு. ஆனந்த் வைத்தியநாதன் பிரபல Voice -Expert (ex-Head, Indian Classical Music, HMV - Trained in the Husler’s Technique of Voice Engineering under Prof. Peter , Calatin, Germany)






பின் குறிப்பு...

இவ்வளவு சிறப்பாக நடந்துவந்த இந்த நிகழ்ச்சியில் இறுதி கட்டத்தில் சில குளறுபடிகள் நடப்பது போல உள்ளது... குயிலோ அஜித் பக்கம் சாய்கிறது...பொறுத்திருந்தோ பார்ப்போம்... நடுவர்கள் எப்படியாவது அல்காவினை மேலே கொண்டு செல்வதில் பெரும் சிரத்தை எடுப்பதுபோல தெரிகிறது... பிஞ்சு மனதுகளை புண் படுத்தாதீர்கள் நடுவர்களே.

திறமையை பாருங்கள் நடுவர்களே... வேறு எதற்கும் மயங்கதீர்கள்...நடந்து கொண்டிருக்கும் semi -final சுற்றில் இந்த அநியாயத்தை உணரக்கூடியதாக இருந்தது...


இந்த சுற்றுக்கு சிறப்பு அதிதிகளாக வருகை தந்தோர்;

Classical Music இற்கு Dr . நித்தியஸ்ரீ மகாதேவன்:




Melodies பாட Mr . ஹரிஸ் ராகவேந்திரா:



Modern இசைக்கு Ms . சுசித்திர



இறுதி சுற்றில் பங்குபற்ற 03 போட்டியாளர்கள் தெரிவு செய்யப்படுவர்... கால் இறுதி போட்டி முடிந்த பின் போட்டியாளர்களிட்கு கிடைக்கும் மொத்த புள்ளிகளின் அடிப்படையில் முதல் இரண்டு இடத்தில் இருக்கும் போட்டியாளர்கள் நேரடியாக இறுதி சுற்றுக்கு செல்வர் மற்ற இருவருக்கும் மீண்டும் ஒரு போட்டி நடாத்தப்பட்டு ஒருவர் வெளியேற்றப்படுவர்..கொஞ்சம் கடுமையான போட்டிதான்.

இது இப்படியிருக்க நடுவர்களுக்கோ ஒரே Tension எங்கே தங்களின் Favourite பாடகி அல்க அஜித் இக்கட்டான போட்டிக்கு தள்ளப்பட்டுவிடுவாரோ என்ற பயம். ஒருவழியாக இவர்களின் அநியாயத்துக்கு இரையானதோ பாவப்பட்ட சிறுசுகளான நித்யஸ்ரீ , ரோஷன். அல்க அஜித் மற்றும் நித்யஸ்ரீ இடையே நடந்த போட்டியில் பழிவாங்கல் படலம் நடந்தது... சிறப்பு அதிதிகளின் கூற்றுப்படி இருவரும் மிக நன்றாக பாடினார்கள் இருப்பினும் அல்க 28 புள்ளிகளுடன் வெற்றி பெற நித்யஸ்ரீக்கோ கொடுக்கப்பட்டது 20 புள்ளிகள். தர வரிசையில் ஷரவன் முன்னிலையில் இருக்க அடுத்து இருந்ததோ ரோஷன், அல்கவிட்கு கிடைத்த இந்த அதிரடி 28 ஆல் அல்க ஏற்றப்பட்டார் 02 ஆம் இடத்திற்கு...

இறுதி போட்டியில் பாடப்போவது ஷரவன், அல்கவுடன்.... ரோஷனா.... நித்தியஸ்ரீயா.... பொறுத்திருந்து பார்ப்போம்..

Photo With a GREAT Meaning in it....

அனைவரும் கருத்தூன்றி பார்க்க வேண்டிய ஒரு படம்...


உங்கள் அன்புக்குரியவர் வாகனம் செலுத்திக்கொண்டிருந்தால்... உடனடியாக தொலை பேசி அழைப்பை துண்டியுங்கள்...

முல்லாவின் தந்திரம் - முல்லா கதைகள்...

ஓரு நாள் முல்லா குளத்தில் நீந்திக்கொண்டிருந்த வாத்துக்களில் ஒன்றைப் பிடிக்க முயற்சி செய்தார். ..

வாத்துக்கள் கரை ஒரமாக வரும்போது முல்லா அதனை எட்டிப் பிடிக்க முயற்சி செய்தார்.

வாத்துக்களோ அவர் கையில் அகப்படுவதுபோல பாவனை செய்து நழுவி கொண்டிருந்தன.

அந்தச் சமயத்தில் முல்லாவின் நண்பர் ஒருவர் அந்தப் பக்கமாக வந்தார்.

வாத்தைப் பிடிக்க முல்லா எடுக்கும் பிரயாசையையும், அதில் அவர் அடிக்கடி தோல்வியடைவதையும் கண்ட நண்பருக்குச் சிரிப்பு வந்தது.

என்ன முல்லா அவர்களே வாத்து வேட்டை நடக்கிறது போலிருக்கிறதுஞ என்று சிரித்துக் கொண்டே கேட்டார்.

முல்லா உடனே தமது பையிலிருந்த ரொட்டித் துண்டை எடுத்து குளத்து நீரில் நனைத்துச் சாப்பிடத் தொடங்கினார்.

என்ன செய்கிறீர்கள் முல்லா அவர்களே என நண்பர் கேட்டர்.

வாத்து சூப்பில் ரொட்டியை நனைத்துச் சாப்பிடுகிறேன என்று தனது ஏமாற்றத்தை மறைத்துக் கொண்டு கூறிச் சமாளித்தார் முல்லா.

பக்கத்து வீட்டுக்காரியின் மோப்பம் - முல்லா கதைகள்...

முல்லா பற்றிய சிறிய முன்னுரை...

முல்லா நஸ்ருத்தீன் என்பது அவருடைய முழுபெயர். இதில் முல்லா என்பது அறிஞர் - கல்விமான் என்பதைக் குறிக்கும் சிறப்பு அடைமொழியாகும். இவர் துருக்கி நாட்டைச் சேர்ந்த ஒரு முஸ்லீம் ஆவார். துருக்கியிலுள்ள எஸ்கி ஷஹர் என்பது அவருடைய பிறந்த ஊர் எனக் கூறப்படுகின்றது. அந்த ஊரில் முல்லாவின் பிறந்தநாளை ஒவ்வொரு ஆண்டும் மக்கள் கோலாகலமாகக் கொண்டாடுகின்றனர்.

முல்லா நஸ்ருத்தீன் சிறந்த கவிஞர், சிறந்த நகைச்சுவையாகக் கவிதை எழுதுவதிலும் பேசுவதிலும் வல்லவர் ஆவார். இவருடைய இந்த புகழுக்கு அவர் எழுதிய கதைகள் சான்றhகும். இவருடைய கதைகள்யாவும் அவருடைய வாழ்க்கையில் நடந்தவற்றை ஒட்டியதாக இருந்தது.



முல்லாவின் வீட்டுக்கு அடுத்த வீட்டில் ஒரு பெண்மணி வசித்து வந்தாள். முல்லா வீட்டில் என்ன சமையல் செய்தாலும் அவள் அதை மோப்பம் பிடித்து தனது சிறிய மகளை அனுப்பி சமைத்த பொருளை கொஞ்சம் கேட்டு வாங்கி வரச் சொல்வாள். அவளுடைய அந்த விரும்பத்தகாத வழக்கம் முல்லாவுக்கு மிகவும் சங்கடமாக இருந்தது. அதை எப்படித் தடுப்பது என்றும் விளங்கவில்லை. ஒருநாள் முல்லாவுக்கு கோழிக்குஞ்சு சூப் தயாரிக்கச் செய்து சாப்பிட வேண்டும் என்ற ஆசையாக இருந்தது. சூப் தயார் செய்யச் சொல்லலாம் என மனைவியை அழைத்தார். மனைவி அவர் முன்னால் வந்து நின்றபோது முல்லாவுக்கு அண்டை வீட்டுகாரியின் நினைவு வந்தது. வீட்டில் சூப் செய்யத் தொடங்கினால் அண்டை வீட்டுக்காரி மோப்பம் பிடித்துக் கொண்டு சூப் வாங்க ஆள் அனுப்பி விடுவாளே என்ற எண்ணம் அவருக்கு ஏற்ப்பட்டது. சூப் இப்போது தயார் செய்ய வேண்டாம் என்று கூறி மனைவியை அனுப்பி விட்டார். சற்று நேரத்திற்கெல்லாம் கதவு தட்டப்படும் ஒசை கேட்டது. முல்லா எழுந்து சென்று கதவைத் திறந்தார். அண்டை வீட்டுக்காரியின் சின்னப் பெண் கையில் ஒரு கிண்ணத்துடன் வீட்டுவாசலில் நின்று கொண்டிருந்தாள். என்ன ? என முல்லா விசாரித்தார். உங்கள் வீட்டில் கோழி சூப் தயாரித்தீர்களாமே * அம்மா கொஞ்சம் வாங்கிக் கொண்டு வரச்சொன்னாள் என்று சிறுமி கூறினாள். முல்லா உரத்த குரலில் ஹ ஹ ஹ என்று சிரித்தார். உள்ளேயிருந்த மனைவி ஒடிவந்து உங்களுக்கு என்ன வந்துவிட்டது? ஏன் இப்படிச்
சிரிக்கிறீர்கள்? என்று கேட்டாள். இந்த வினோதத்தைப் பார் ? இத்தனை காலமாக நாம் சமையல் செய்யும்போதுதான் அண்டை
வீட்டுக்காரி மோப்பம் பிடித்து நாம் சமைக்கும் பொருளில் கொஞ்சம் வாங்கி வரச் சொல்லுவாள். இப்போது நான் சூப் செய்யச் சொல்ல வேண்டும் என்று மனத்திலேதான் நினைத்தேன். இதைக்கூட அண்டை வீட்டுக்காரி மோப்பம் பிடித்து சூப் வாங்கி வரச் சொல்லி மகளை
அனுப்பியிருக்கிறhள் பார் என்று கூறிவிட்டு முல்லா சிரிக்கலானார்...

மொபைல் வாங்கப் போறீங்களா…?

செல்போன்கள் சில ஆண்டுகளுக்கு முன் அதிசயப் பொருள். இன்றோ அது அத்தியாவசியமாகிவிட்டது. பயனுள்ளது என்பதோடு பொழுது போக்கு அம்சங்களும் இருப்பதால் அனைவரையும் வசியப் படுத்திவிட்டது எனலாம்.
நண்பர்கள், உறவினர்களின் செல்போன்களைப் பார்த்து வியந்து, ஒரு மொபைலை வாங்கலாம் என்று கடைக்குப் போனால் எல்லாவித போன்களும் கவர்ந்து இழுக்கின்றன. நாளுக்குநாள் புதிய வசதிகள், மாதிரிகள் அறிமுகமாகின்றன. எனவே ஏற்கனவே செல்போன் வைத்திருந்தாலும் வேறுமாடல் மீது மோகம் வருகிறது.

நீங்களும் புதிய மொபைல் வாங்க திட்டம்போட்டு வைத்திருக்கிறீர்களா? இதோ உங்களுக்காகவே இங்கே சில ஐடியாக்கள்…

பட்ஜெட்: மொபைல் வாங்குவதற்கு முன்பு உங்கள் பட்ஜெட் எவ்வளவு என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள். தற்போது எண்ணற்ற மாடல்கள், பிளான்கள் கிடைக்கின்றன. அதில் உங்களுடைய பட்ஜெட்டுக்கு எது ஒத்துவரும் எனத் தெரிந்து கொண்டு, அதைத் தேர்ந்தெடுங்கள். என்னென்ன வசதிகள் உள்ளன என்பதை கடைக்காரரிடமே நீங்கள் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.

பயன்படுத்தும் முறை: நீங்கள் எவ்வளவு நேரம் மொபைலைப் பயன்படுத்த வேண்டியதிருக்கும் என்பதைக் கணக்கிட்டுப் பாருங்கள். அதிக நேரம் பேசு பவரா? அல்லது அதிகமாக எஸ்.எம்.எஸ். பயன்படுத்துவீர்களா? இதில் எதை நீங்கள் அதிகமாக உபயோகப்படுத்த வேண்டிய நிலை உள்ளதோ, அதற்குத் தகுந்தபடி பிளானைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.

புதிய வசதிகள்: தற்போது நடைமுறையில் என்னென்ன புதிய வசதிகள் உள்ளன என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். பொதுவாக குறிப்பிட்ட கால ஒப்பந்தம், மாதக்கட்டணம், ப்ரீபெய்டு, குத்தகை என பல வகை உள்ளன.

மாத வாடகை பிளானில் ஒவ்வொரு மாதமும் பேசிய பின் அந்த மாதத்தின் இறுதியில் பில் வரும். சில மாதங்கள் இது அதிகமாகவும், சில மாதங்கள் குறைவாகவும் இருக்கலாம். அதற்குத் தகுந்தபடி பட்ஜெட் உள்ளவர் என்றால், உங்களுக்கு மாத வாடகை பிளான் சரியாக இருக்கும். வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு குறிப்பிட்ட கால ஒப்பந்த பிளானும், குறுகிய காலத்துக்கு மட்டும் செல்போன் தேவைப்படுபவர்களுக்கு குத்தகை பிளானும் பொருந்தும்.

பிளானுக்குத் தகுந்தபடி கால் கட்டணங்கள் வித்தியாசப்படுகின்றன. ஒரே நிறுவனத்தில் சில பிளான்களில் குறைந்த கட்டணமும், சில பிளான்களில் அதிக கட்டணமும் வசூலிக்கப்படுகின்றன. சில நிறுவனங்கள் நொடியைக் கணக்கிட்டும், சில நிறுவனங்கள் நிமிடத்தைக் கணக்கிட்டும் கட்டணங்களை முடிவு செய்கின்றன. அதே நிறுவனத்தைச் சேர்ந்த எண்களுக்கு பேச குறைந்த கட்டணமும், மற்ற நிறுவனத்தைச் சேர்ந்த எண்களுக்கு பேச அதிக கட்டணம் வசூலிக்கும் வழக்கமும் நடைமுறையில் உள்ளது. எஸ்.எம்.எஸ். அனுப்புவதற்கு சில நிறுவனங்கள் கட்டணம் வசூலிக்கின்றன, சில நிறுவனங்கள் குறிப்பிட்ட எண்ணிக்கை வரை இலவசமாக எஸ்.எம்.எஸ்.கள் அனுப்ப சலுகை அளிக்கின்றன. எனவே, எந்த பிளான் உங்களுக்குப் பொருத்தமாக இருக்கும் என முடிவு செய்து அதை தேர்ந்தெடுங்கள். ப்ரீ பெய்டு, போஸ்ட் பெய்டு போன்ற வற்றிலும் சலுகைகள் வரலாம். சில நிறுவனங்கள் புது பிளானுக்கு மாறுவதற்கு குறிப்பிட்ட தொகையை கட்டணமாகப் பெற்றுக்கொள்கின்றன. எனவே, சிம்கார்டு வாங்கும்போது அதில் குறிப்பிட்டுள்ள விதிமுறைகளை கவனமாகப் படித்துப் பாருங்கள்.

பேட்டரியில் கவனம்: ஆரம்பகட்ட மொபைலில் கால் செய்யும் வசதி, எஸ்.எம்.எஸ். அனுப்பும் மற்றும் பெறும் வசதி மட்டுமே இருக்கும். எம்.எம்.எஸ்., வாய்ஸ் ரெக்கார்டிங், வீடியோ கால்ஸ், இன்டர்நெட் போன்ற நவீன வசதிகள் சிலருக்கு தேவைப்படலாம். இதில் எந்த வசதி உங்களுக்கு தேவைப்படுகிறதோ, அந்த வசதி உள்ள மொபைலை வாங்குவது நல்லது. அதிக விலை கொடுத்து அனைத்து நவீன வசதிகளும் கொண்ட மொபைலை வாங்கி பயன்படுத்தாமல் இருப்பதைவிட, தேவையான வசதி உள்ள மொபைலை வாங்கினால் பணம் வீணாகாது. அதேபோல் அதிக நேரம் நீடிக்கக் கூடிய பேட்டரி உள்ள மொபைலாகப் பார்த்து வாங்குவதும் நல்லது.

மாற்றிக் கொள்ளும் வசதி: நீங்கள் மொபைல் வாங்கிய 6 மாதத்திற்குப் பிறகு நவீன வசதி நிறைந்த மொபைல் புதிதாக வரலாம். அப்போது அதை வாங்க நீங்கள் ஆசைப்பட்டால் ஏற்கனவே உள்ள மொபைலைக் கொடுத்து விட்டுப் புதியதை வாங்கும் வசதி உள்ளதா என்பதைப் பாருங்கள். கூடுதல் தொகை கொடுக்க வேண்டியது இருந்தால், அது உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்றதா என்பதையும் தீர்மானித்துக் கொள்ளுங்கள்.

நெட்வொர்க் வசதி: நீங்கள் நகர்ப்பகுதியில் மட்டும் மொபைலைப் பயன்படுத்தினால் போதுமா? அல்லது எல்லா இடங்களிலும் பயன்படுத்த வேண்டுமா? என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள். ஜி.எஸ்.எம். மற்றும் 3G என இரண்டு வகையான நெட்வொர்க்குகள் உள்ளன. இதில் நீங்கள் எந்த மாதிரியான இடங்களில் மொபைலைப் பயன்படுத்துவீர்களோ, அதற்கேற்ற நெட்வொர்க் வசதியுள்ள மொபைலைத் தேர்ந்தெடுங்கள்.

மதிப்பிடுங்கள்: உங்களைச் சுற்றி உள்ள குடும்பத்தினர்கள், உறவினர்கள், நண்பர்கள் எந்த மாதிரியான மொபைலைப் பயன்படுத்துகின்றனர், அதில் உள்ள வசதிகள் என்னென்ன, அதன் விலை எவ்வளவு என்பதை விசாரித்து, அதனுடைய மதிப்பைக் கணக்கிட்டுப் பாருங்கள். அதில் எந்த மொபைல் உங்களின் பயன்பாட்டிற்கும், பட்ஜெட்டிற்கும் ஒத்து வருகிறதோ, அதையே நீங்களும் தேர்வு செய்யலாமே! ...

பின்னூட்டங்களிலிருந்து ஒரு பதிவு...

இதை வாசிக்க தொடங்கும் அனைவருக்கும் வணக்கம்...

இப்பெல்லாம் பதிவுகள் நல்ல இருக்குதோ இல்லையோ கிடைக்கும் பின்னூட்டங்கள் மிகவும் சுவாரசியமாக இருக்கிறது....அடேயப்பா பதிவு ஒன்றுக்கு கிடைக்கும் பின்னூட்டங்களையே தொகுத்து ஒரு பதிவாகவே போடலாம்... இந்த யோசனை இணைப்பிலுள்ள பதிவினை பார்த்ததும் எனக்கு உதித்தது...
இனி வரும் எழுதுக்களிட்கும் கற்பனைக்கும் நான் பொறுப்பல்ல....எல்லா புகழும் பழியும் "பாசக்கார பயலு" க்கே.....
***
புலிக்கு பின்னாடி போன‌
மானும்
பொண்ணுக்கு பின்னாடிப் போன‌
ஆணும்..
பிழைத்ததாக சரித்திரம் இல்லை..
இப்படிக்கு
சிங்கிளா வாழ்ந்தாலும்
சிங்கம் போல வாழ்வோர் சங்கம்…[படித்ததும்...மறந்துவிடவும்]
***
உன் பெயரைக்கூட நான் எழுதுவதில்லை..
ஏன் தெரியுமா?
“பேனா” முனை உன்னை குத்திவிடுமோ என்று..
இப்படிக்கு
Spelling தெரியாமல் சமாளிப்போர் சங்கம்
***

அவள் என்னை திரும்பி பார்த்தாள்..
நானும் அவளைப் பார்த்தேன்..
அவள்..மறுமடியும் என்னைப் பார்த்தாள்
நானும் அவளை மறுபடியும் பார்த்தேன்..
இப்படிக்கு
பரிட்சையில் ஒன்னுமே தெரியாமல்
திருதிரு வென முழிப்போர் சங்கம்
***

காதல் One Side -ஆ பண்ணினாலும்
Two side-ஆ பண்ணினாலும்
கடைசியா Suicide- தான் பண்ணக்கூடாது
இப்படிக்கு
காதல் பற்றி Four Side-ம் யோசிப்போர் சங்கம்
***
அனுமதி கேட்க்கவும் இல்லை…
அனுமதி வழங்கவும் இல்லை…
ஆனால்
பிடிவாதமாக ஒரு முத்தம்..
“கன்னத்தில் கொசுக்கடி”
இப்படிக்கு
புரண்டு புரண்டு படுத்து யோசிப்போர் சங்கம்
***
கிரிக்கெட்டில்
ரன் எடுக்காமல் போனால் டக் அவுட்
ரயிலில்
டிக்கெட் எடுக்காமல் போனால் வித் அவுட்
வீட்டில்
கொசுவை கொல்லுவதற்கு ஆல் அவுட்
நீங்க‌
இதை அப்ரூவ் பண்ணலைன்னா
நான் மூடு அவுட்
இப்படிக்கு
பாசக்கார பய புள்ளைங்க சங்கம்
***

எப்படி இப்படியெல்லாம் இவங்களால மட்டும் முடியுது... ஏதும் ரூமோ அல்லது ஹாலோ போட்டு யோசிச்சிருப்ப்யின்களோ ....

எடுத்த காரியம் வெற்றி பெற...


நீங்கள் எதைச் செய்தாலும் வெற்றி மேல் வெற்றி வேண்டுமா?

வாலிபமாக இருந்தாலும் சரி, வயோதிகமாக இருந்தாலும் சரி, நீங்கள் வேலை தேடிக் கொண்டிருப்பவர்கள் என்றாலும், சுயமாக வேலை தொடங்க எண்ணி இருந்தாலும் உங்கள் நம்பிக்கையில், காரியத்தில் வெற்றி பெற ஒரே தாரக மந்திரம்தான் இருக்கிறது. அதன் பெயர் முயற்சி. ஆனால் வெற்றிக்கு பல வழிகள் இருக்கின்றன. அவை என்னென்ன? ஒவ்வொன்றாக அறிந்து கொள்ளலாம் இனி. எண்ணித் துணிக கருமம் என்று கூறியிருக்கிறார்கள் தாதையர்கள். `சிந்திக்காதவன் முட்டாள், சிந்திக்கத் தெரியாதவன் கோழை, சிந்திக்க மறுப்பவன் பிடிவாதக்காரன்’ எனக் கூறுகிறார் இங்கிலாந்து மேதை பிரியாண்ட். விஞ்ஞானி ஐன்ஸ்டினோ, ஆழ்ந்த சிந்தனைக்கு அதிகம் பயன் உண்டு என்கிறார்.

சிந்தனை செய்யாமல் தொடங்கும் எந்தக் காரியமும் வீண். செயலில் குதிக்கும் முன் ஆழமாகச் சிந்திக்க வேண்டும். ஒன்றுக்கு பலமுறை திரும்பத் திரும்பச் சிந்திக்க வேண்டும். நேர்மறையாக நல்ல முடிவை எதிர்பார்த்து மட்டுமே செயல்படாமல், எதிர்பாராத திருப்பங்களை சந்திக்கவும், லாபம்போல நட்டத்தை சமாளிக்கவும் மனோ தைரியத்தை வரவழைத்துக் கொண்டு திடமான முடிவெடுக்க வேண்டும். துணிந்தபின் விவேகம்தான் இரண்டாவது தேவை. செய்யலாமா? வேண்டாமா? என்று முடிவெடுப்பதற்கு எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் ஒரு செயலில் இறங்கியபிறகு பின்வாங்கவோ, திகைக்கவோ கூடாது. வேகத்தைவிட விவேகம் முக்கியம். சிறுசிறு முயற்சியாக முன்னோக்கியே அடியெடுத்து வைக்க வேண்டும். புதிய புதிய சிந்தனைகள் வெற்றியை தேடித்தரும் அடுத்த வழியாகும். எல்லா தொழில்களிலும் போட்டி உண்டு. பழைய பேப்பர், பலசரக்கு வியாபாரம் முதல் பங்குச் சந்தை, தகவல் தொழில்நுட்பம் வரை எல்லாம் போட்டிதான்.

பரபரப்பான இயக்கத்தில் நாமும் ஒரு பந்தயக் குதிரை என்று எண்ண வேண்டும். நமக்கு கடிவாளம் கட்டப்பட்டு இருந்தாலும் இலக்கு ஒன்றே குறி. ஆனால் வழிகள் பல உண்டு. புதிதாக சிந்தித்து செயல்படுத்த வேண்டும். போட்டியாளருக்கு ஏற்ப வாடிக்கையாளருக்கு சலுகை அளிக்க வேண்டும். தரமான பொருட்களை வழங்க வேண்டும். தொலைநோக்கு சிந்தனையே நம்மை நிலை நிறுத்தும். காலம் ஒரு சுழற்சி முறைக்கு உட்பட்டது. இருந்தாலும் பல புதிர்களைக் கொண்டது. ஆகையால் எதிர்காலத்தைக் கணிப்பது கடினம்தான். ஆனால் நாளைய தேவையையும், மாற்றத்தையும் யூகித்து அறிந்து செயல்பட்டால் வெற்றி கைகூடும்.

காற்றடிக்கும் நேரத்தில் மாவு விற்கவும் கூடாது, ஊசி தேவைப்படும் இடத்தில் நூல் விற்கவும் கூடாது. காலம், தேவை இரண்டையும் கவனத்தில் கொண்டால் வெற்றி என்பது உங்கள் கைகளில் தவழும். நாம் செய்யும் தவறுக்கு அனுபவம் என்று பெயரிடுகிறோம் என்பார்கள். அனுபவம்தான் நம்மைப் பக்குவப்படுத்தும். அவைதான் வாழ்வின் பொக்கிஷங்கள். அவ்வப்போது ஏற்படும் வெற்றி தோல்வி களை அசைபோட்டு அனுபவப் பாடங்களில் தேர்வு பெற்று வெற்றிப் பயணத்தில் பீடு நடைபோடுங்கள். பயத்தை கைவிடுவதே வெற்றிப் பாதைக்கு பலம் சேர்க்கும். தோல்வியைக் கண்டு பயம் கொள்ளக்கூடாது. தடங்கல்களைக் கண்டு தயங்கி நிற்க கூடாது. ஒரு மேட்டை கடக்க வேண்டுமென்றால் இரண்டு பள்ளங்களை கடந்தே ஆக வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். வெற்றியின் அடிப்படையே பேச்சுக்கலைதான். வாயுள்ள பிள்ளை பிழைக்கும் என்பார்களே. வாழ்க்கையின் தாரக மந்திரம் அதுதான். வியாபாரத்திலும் அதுதான் பெரும் சக்தி. உற்சாகமாகப் பேசினால் உலகத்தையே வளைத்துப் போட முடியும். பேச்சுடன் முகத்தில் புன்னகையும் ஏந்தியவர்களுக்கு வெற்றிமேல் வெற்றிதான். சாதனைக்கு எல்லை கிடையாது. சோதனை இல்லாமல் வெற்றியும் கிடையாது. எத்தனை இடையூறுகள் வந்தாலும் முயற்சியை இடையில் விடக்கூடாது. `கிடைத்ததுபோதும்’ என்று சலிப்பு கொள்ளவும் கூடாது. எடுத்த காரியத்தில் உறுதி இருக்க வேண்டும். அதை வென்று முடிக்க வேண்டும்... வெற்றி உங்கள் பக்கம்தான்

Wishing You All The Very Best....

கவர்ச்சியாக இருப்பது எப்படி...? (Part IV)



07) உங்களை நீங்களே உணருங்கள்...நீங்கள் கவர்ச்சியாக இருப்பதை நீங்களே உணராவிட்டால்...எப்படி மற்றவர்களால் உணர முடியும். நீங்கள் பெறுமதியானவர்..நம்பிக்கையுடன் இருங்கள். நம்பிக்கை, துணிவு இரண்டிற்கும் இடையிலான மெல்லிய வேறுபாட்டை தெரிந்து கொள்ளுங்கள்...இரண்டாமவரை கொஞ்சம் இந்த விடயத்தில் தள்ளி வையுங்கள்.

08) மற்றவர்களை திறந்த மனத்துடன் அணுகுங்கள்...மூடிய மனப்பாங்கு உடையவர்களையும் சமூகத்துடன் சேர மறுக்கும் இயல்புடயவர்களை மற்றவர்கள் வெறுப்பது சாதாரண விடயம்...எனவே புதிய சொந்தங்களிட்கு திறந்த மனத்துடன் வழிவிடுங்கள் உரையாடுங்கள்... யாருடன் பேசுகிறீர்கள் என்பது முக்கியம் அல்ல மனதில் வையுங்கள் நீங்கள் ஒன்றும் குறைந்தவர் அல்ல நீங்களும் மானுட இனத்தின் ஒரு பிரதிநிதி...

இறுதியாக...இந்த உலகம் எவ்வளவு அழகானது என்பதை நீங்கள் உங்கள் பாருங்கள்...நீங்கள் எவ்வளவு கவர்ச்சியானவர் அழகானவர் என்பதை இந்த உலகம் பார்க்கும்...

கவர்ச்சியாக இருப்பது எப்படி...? (Part III)

5) புன்னகை...புன்னகை மற்றவர்களை கவர்வதற்கான ஒரு இலகுவான வழி. நீங்கள் புன்னகை புரியும் பொது மற்றவர்களின் மனதில் நெறைய இடத்தை பிடிக்கிறீர்கள். உங்களிற்கு தெரியுமா அநேகமான வெற்றிபெற்ற மனிதர்கள் எப்பொழுதும் புன்னகை புரிபவர்களாவர்.

6) குற்றம் சாட்டாதீர்கள்...அநேகமானோர் குற்றதிட்குரிய காரணங்களை கண்டு அவற்றை நீக்காமல் தொடர்ச்சியாக குற்றம் சாட்டியபடியே இருப்பார்கள். உங்கள் தலை விதியை நினைத்து புலம்புவதையும் குற்றம் சொல்லுவதையும் உடனடியாக நிறுத்துங்கள் இல்லாவிடில் இதை விட பெரிய இடர்களில் சிக்கிக்கொள்ள நேரிடும். உங்கள் வாழ்கையை நீங்கள் ரசிக்க கற்றுக்கொள்ளுங்கள்...உங்களிற்கு கிடைத்துள்ள வெகுமதிகளை அனுபவிக்கவும் நன்றி சொல்லவும் கற்றுக்கொள்ளுங்கள்.


மிகுதி விரைவில் தொடரும்...

கவர்ச்சியாக இருப்பது எப்படி...? (Part II)

03) மற்றவர்கள் பேசுவதையும் கேளுங்கள்...இன்று மற்றவர்கள் பேசுவதற்கு செவி சாய்க்கும் தன்மை வெகுவாய் குறைந்து வரும் போக்கையே காணக்கூடியதாக உள்ளது, மற்றவர்கள் பேசும் பொது செவி சாய்ப்பது ஒரு நல்ல பண்பாகும். மற்றவர்கள் பேசுவதை கேட்கும் பொது உண்மையாக கேளுங்கள்..கேட்பது போல பாசாங்கு செய்யாதீர். உங்களுடன் பேசுவதும் ஒரு மதில் அல்லது சுவருடன் பேசுவதற்கும் எந்த ஒரு வித்தியாசமும் இல்லையெனில்...நீங்கள் கவர்ச்சி அற்றவராவீர். மற்றவர்கள் பேசுவதை கேட்கும் கலை உங்களிடம் காணப்படுமேயானால் மற்றவர்கள் மத்தியில் உங்களிடம் நிச்சயமாக ஒரு ஈர்ப்பு காணப்படுவது தெளிவாகும்.

04) மனம் விட்டு சிரியுங்கள்... சிரிக்கும் பொது எந்த மனிதரும் ஒரு வித கவர்ச்சியை பெறுகின்றனர். உலகினை எதிர்மறையற்ற நோக்கில் பாருங்கள். அடிக்கடி சிரிக்க முயலுங்கள். கொஞ்சம் ஹாசிய பண்புள்ள நபர் யாவராலும் விரும்பப்படுவர் மாறாக எதிமறையான பண்பு, மகிழ்ச்சியற்ற கோபமான நபர் எவராலும் விரும்பப்படமாட்டார்.
மிகுதி விரைவில் தொடரும்...

கவர்ச்சியாக இருப்பது எப்படி...?

கவர்ச்சி என்பது ஒரு வினோதமான விஷயம். ஒருவர் மிகவும் அழகானவராக இருக்க முடியும் அதே நபர் கவர்ச்சியாக இல்லாவிடின் எவரும் கண்டுகொள்ளாத ஒருவராகவே இருப்பார். கவர்ச்சியாக இருப்பதென்பது கட்டாயமாக அழகானவராக இருக்க வேண்டும் என்பதில்லை. உள் அழகை காட்டவேண்டும்...அது எப்படி முடியும்...


நீங்கள் கவர்சியானவராக இருக்க வேண்டுமா...பின் வரும் 08 விடயங்களை கருத்தில் கொள்ளுங்கள்...

01 ) நீங்கள் நீங்களாகவே இருங்கள்... பெரும்பாலானோர் தங்களின் சொந்த இயல்புகளை மறைத்து வேறோ ஒருவரின் இயல்பை பின்பற்றுவதேயே காணக்கூடியதாக உள்ளது... உங்களின் இயற்கையான குணா நலன்களை மறைக்க வேண்டிய தேவை எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் தேவையற்ற ஓன்று அதே போல் வேறு ஒருவரின் இயல்புகளை பிரதிபலிக்கவேண்டிய அவசியமும் இல்லை. இந்த உலகில் எவரும் முழுமையான மனிதர் கிடையாது. உண்மையாக நடந்து கொள்ளும் மனிதர்கள் எப்போதும் மிகவும் கவர்ச்சியானவர்களாக இருப்பார்கள். வெட்கம் தவிருங்கள், நீங்கள் உங்களை விரும்புங்கள் மற்றவர்கள் தானாக உங்களை விரும்புவார்கள்...


02 ) நேரடியாக / குறிப்பாக பேசுங்கள்... அர்த்தமுள்ளவாறு பேசுபவர்களிடம் இயற்கையாகவே ஒருவித கவர்ச்சி உள்ளது... பேச வேண்டும் என்பதற்காக பேசாதீர்கள். சுற்றிவளைத்து பேசாதீர்கள்... ஆப்ரகாம் லிங்கன் சொன்னதைப்போல " மிகையாக பேசி சந்தேகங்களுடன் பிரச்சனைகளை தீர்ப்பதை விட பேசாமல் இருந்து முட்டாள் என பெயர் கேட்பதே மேல்"



மிகுதி நாளை....