பின்னூட்டங்களிலிருந்து ஒரு பதிவு...

இதை வாசிக்க தொடங்கும் அனைவருக்கும் வணக்கம்...

இப்பெல்லாம் பதிவுகள் நல்ல இருக்குதோ இல்லையோ கிடைக்கும் பின்னூட்டங்கள் மிகவும் சுவாரசியமாக இருக்கிறது....அடேயப்பா பதிவு ஒன்றுக்கு கிடைக்கும் பின்னூட்டங்களையே தொகுத்து ஒரு பதிவாகவே போடலாம்... இந்த யோசனை இணைப்பிலுள்ள பதிவினை பார்த்ததும் எனக்கு உதித்தது...
இனி வரும் எழுதுக்களிட்கும் கற்பனைக்கும் நான் பொறுப்பல்ல....எல்லா புகழும் பழியும் "பாசக்கார பயலு" க்கே.....
***
புலிக்கு பின்னாடி போன‌
மானும்
பொண்ணுக்கு பின்னாடிப் போன‌
ஆணும்..
பிழைத்ததாக சரித்திரம் இல்லை..
இப்படிக்கு
சிங்கிளா வாழ்ந்தாலும்
சிங்கம் போல வாழ்வோர் சங்கம்…[படித்ததும்...மறந்துவிடவும்]
***
உன் பெயரைக்கூட நான் எழுதுவதில்லை..
ஏன் தெரியுமா?
“பேனா” முனை உன்னை குத்திவிடுமோ என்று..
இப்படிக்கு
Spelling தெரியாமல் சமாளிப்போர் சங்கம்
***

அவள் என்னை திரும்பி பார்த்தாள்..
நானும் அவளைப் பார்த்தேன்..
அவள்..மறுமடியும் என்னைப் பார்த்தாள்
நானும் அவளை மறுபடியும் பார்த்தேன்..
இப்படிக்கு
பரிட்சையில் ஒன்னுமே தெரியாமல்
திருதிரு வென முழிப்போர் சங்கம்
***

காதல் One Side -ஆ பண்ணினாலும்
Two side-ஆ பண்ணினாலும்
கடைசியா Suicide- தான் பண்ணக்கூடாது
இப்படிக்கு
காதல் பற்றி Four Side-ம் யோசிப்போர் சங்கம்
***
அனுமதி கேட்க்கவும் இல்லை…
அனுமதி வழங்கவும் இல்லை…
ஆனால்
பிடிவாதமாக ஒரு முத்தம்..
“கன்னத்தில் கொசுக்கடி”
இப்படிக்கு
புரண்டு புரண்டு படுத்து யோசிப்போர் சங்கம்
***
கிரிக்கெட்டில்
ரன் எடுக்காமல் போனால் டக் அவுட்
ரயிலில்
டிக்கெட் எடுக்காமல் போனால் வித் அவுட்
வீட்டில்
கொசுவை கொல்லுவதற்கு ஆல் அவுட்
நீங்க‌
இதை அப்ரூவ் பண்ணலைன்னா
நான் மூடு அவுட்
இப்படிக்கு
பாசக்கார பய புள்ளைங்க சங்கம்
***

எப்படி இப்படியெல்லாம் இவங்களால மட்டும் முடியுது... ஏதும் ரூமோ அல்லது ஹாலோ போட்டு யோசிச்சிருப்ப்யின்களோ ....

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கபடுகின்றன