எல்லோரும் ஏழைகள்தான்...


ஒரு நாள் மிகவும் செல்வந்தரான ஒருவர் தனது மகனிற்கு வறுமை என்றால் என்ன ஏழ்மை என்றால் என்ன என்பதை விளங்கப்படுத்த விரும்பினார்...தனது மகனை அருகில் உள்ள ஒரு கிராமத்திற்கு அழைத்து சென்றார். அங்கு அவர்கள் அந்த ஏழை எளியவர்களுடன் சில நாட்கள் தங்கி அவர்களுடனேயே வாழ்ந்து..அவர்களின் வாழ்க்கை முறைகளை அறிந்து கொண்டனர்...அங்கு தங்கி இருந்த நாட்கள் முழுவதும் பகல் இரவாக அவர்களுடனேயே தங்கி இருந்தனர்.
சில நாட்கள் அங்கு தங்கி இருந்த பின் தமது ஊரிற்கு திரும்பி வரும் வழியில், செல்வந்தரான அப்பா தனது மகனிடம் கேட்கிறார்... பிரயாணமும் அங்கு தங்கி இருந்த நாட்களும் எப்படி இருந்தது...?
மகன் பதிலளிக்கிறான்... பிரமாதம் அப்பா...அது ஒரு வித்தியாசமான அனுபவம்..

ஏழை மக்கள் எப்படி வாழ்கிறார்கள் என்பதை அறிந்து கொண்டாயா... அப்பா கேட்கிறார்..

ஆம்...மிகவும்...நன்றாக அறிந்துகொண்டேன்... மகன் பதிலளிக்கிறான்..

அப்படியா...மிக்க மகிழ்ச்சி...சரி அவர்களிடமிருந்து நீ என்ன விடயங்களை கற்றுக்கொண்டாய்... அப்பா வினவுகிறார்...

மகன் சரமாரியாக பதிலளிக்கிறான்...இப்படியாக...

எங்களிடம் இருப்பதோ ஒரே ஒரு நாய்க்குட்டி..அவர்களிடம் நான்கு உள்ளது..

எங்களிடம் உள்ளதோ எமது தோட்டத்தின் மத்தி வரை பரந்துள்ள ஒரு நீச்சல் குளம்... அவர்களிடம் உள்ளதோ எல்லையற்ற நீர் அருவி...

எங்கள் தோட்டத்தை இரவில் ஒளியூட்ட இறக்குமதி செய்யப்பட்ட மின் விளக்குகள்...அவர்களின் இடத்தை ஒளியூட்ட பிரகாசமான நட்சத்திரங்களும் நிலாவும்...

எங்கள் விறாந்தை எங்கள் கேட் வரையே உள்ளது அவர்களதோ...எல்லையற்றது...

எங்களிடம் உள்ளதோ ஒரு சிறிய நிலத்துண்டு அதில் தான் நாம் வாழ்கிறோம்...அவர்களிடம் உள்ளதோ எமது கண்ணுக்கெட்டா தூரம் வரையுள்ள தோட்டமும் தோப்பும்...

எங்களிற்கு சேவை செய்ய வேலையாட்கள் உள்ளனர்...அவர்களோ மற்றவர்களிற்கு சேவை செய்கிறார்கள்...

நாம் எமக்கு தேவையான உணவினை கடைகளில் வாங்குகிறோம்...அவர்களோ தேவையானதை உற்பத்தி செய்கிறார்கள்...

எங்களையும் எமது உடைமைகளையும் பாதுகாக்க எம்மை சுற்றி மதில் உள்ளது...அவர்களிட்கோ...சுற்றி நண்பர்களும் உறவினர்களும் உள்ளனர்...

செல்வந்தரான அப்பவோ பேச்சிழந்து நின்றார்... மகன் தொடர்ந்தான்...

நாம் எவ்வளவு வறியவர்களாக உள்ளோம் என்பதை உணர்த்தியதற்கு மிக்க நன்றி அப்பா...

எங்களிடம் உள்ளதை மட்டுமே பெருமையாகவும் பெரிதாகவும் பார்ப்பதால்... எங்களிடம் இருக்கவேண்டிய நிறைய விடயங்களை இழந்தவர்களாக இருக்கிறோம்...

எங்களிற்கு கிடைக்கும் ஒவ்வொரு சிறிய விடயங்களையும்... நன்றியுடன் பார்ப்போம்...பார்ப்போமா...???

"Life is too short and friends are too few”

இராமாயணமும் .... முகாமைத்துவமும் ... PART III

இராமயணத்தில் இராவணன் தனது இராச்சியத்தினை இழப்பதற்கு முக்கிய காரணம் நல்ல முகாமைத்துவப்பண்புகள் அவனிடம் காணப்படாமையே ஆகும்.

இராவணன் ஆரம்பத்திலிருந்தே தனது முகாமையாளர்களின் ஆலோசனைகளை பொருட்படுத்தாது செயல்பட்டதால் இராமனுடன் போர் புரிந்து தனது நாட்டை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டான்.

மேலும் நிறுவனம் ஓன்று இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும் தருவாயில் அதனது முகாமையாளர்களே அந்நிறுவனத்தை பிணையில் எடுக்கும் திறமையை கொண்டிருத்தல் வேண்டும்.

ஒரு நல்ல முகாமையாளர் தனது கீழ் நிலை உத்தியோகத்தர்களின் ஆலோசனைகளை செவி மடுப்பதோடு, நிறுவனத்தின் நலன் கருதி அனைவரையும் ஓன்று சேர்த்தே செயல்படுவார்.
இராவணனது தவறான முகாமைத்துவப் பண்புகள் விபீஷணனின் பிரிவிற்கு காரணமாக அமைந்தது. இராவணன் நெருக்கடியான கால கட்டத்தில் நல்ல முகாமயாளனாக திகழ்ந்த விபீஷணனை இழந்து போரில் தோல்வியை தழுவிக்கொண்டான்.

நிறுவனங்கள் செயல்படுவது உறவுகளிலேயே... ஊழியகளுடனும், வாடிக்கையாளர்களுடனும் நல்ல உறவை பேணி வளர்க்கும் ஒரு முகாமையாளன் நிறுவனத்தின் ஒரு தூணாக காணப்படுவான், இராமனிடம் இந்த பண்பு நன்கே காணப்பட்டது, உறவுகளை பேணி வளர்ப்பதில் இராமன் கைதேர்ந்தவனாக காணப்பட்டார்.

இந்த பண்பினை விளக்க ஒரு சம்பவம் ... இராவணன் சண்டையில் காயமுற்று இறக்கும் இறுதி கட்டத்தில் போர்க்களத்தில் வீழ்ந்து கிடக்கின்றான்.. அந்த இடத்தில் இராமன் அவன் பக்கத்தில் அமர்ந்து தனது வாழ்வில் தான் பெற்ற சில அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறான். அதே இராவணன் ராமனால் அனுப்பப்பட்ட லக்ஷ்மணிடம் தனது அனுபவங்களை பகிர்ந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது, இராமனுடன் தனது அனுபவங்களை சந்தோசமாக பகிர்ந்து கொண்டான், இந்த நிகழ்வு இராமனின் உறவினை வளர்க்கும் பண்பினை தெளிவு படுத்துகின்றது.

இது போன்ற சில உதாரணங்களும் இன்னும் பல சம்பவங்களும் முகாமைத்துவத்தின் முக்கியத்துவத்தை எடுத்துகூறுகின்றன. முகாமையாளர்கள் எமது காவியங்களிலிருந்து கற்றுக்கொள்ள இன்னும் பல விடயங்கள் உள்ளன. இராமாயணம் மட்டுமல்ல, கீதை, மகாபாரதம் போன்ற காவியங்களிலும் முகாமைத்துவத்தின் முக்கியத்துவத்தை விளங்கப்படுத்தும் சம்பவங்கள் பல காணப்படுகின்றன...

மீண்டும் ...இராமாயணமும் .... முகாமைத்துவமும் ... PART IV... இல் சிந்திப்போம்...