வாசிச்சன் சிரிச்சன் - 3

கணவன் - மனைவி: நகைச்சுவைகள். சிரிக்காமல் தப்பிக்க முடியாது...யாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகமும் ...
______________________________________________________________
டாக்டர் : உங்க கணவருக்கு இப்ப ஓய்வு ரொம்ப முக்கியம்... இந்தாங்க தூக்க மாத்திரை
மனைவி: இதை எத்தனை தடவை கொடுக்கனும் அவருக்கு
டாக்டர்: இது அவருக்கு இல்லை...உங்களுக்கு
______________________________________________________________
மனைவி: ஏங்க என்கிட்ட உங்களுக்கு பிடிச்சது என் சிரிப்பா,கூந்தலா, என்கண்களா?? எதுங்க?
கணவன்: இப்படி சிரிக்காமலேயே சூப்பரா காமெடி பண்ணுறியே அதான்
புடிச்சுருக்கு ______________________________________________________________
மனைவி: நம்ம பையன் வளர்ந்து என்னவாக ஆசைப்படுறீங்க?
கணவன்: அவன் என்ன வேணும்னாலும் ஆகட்டும்...ஆனா யாருக்கும் புருஷனாமட்டும் ஆகக்கூடாது.... நான் பட்ட கஷ்டம் என்னோட போகட்டும்... ______________________________________________________________
மனைவி: ஏங்க.. சமையல்காரியை நிறுத்திட்டு இனி நானே சமைக்கிறேன்...எனக்குமாச எவ்வளவு சம்பளம் கொடுப்பீங்க?
கணவன்: உனக்கு எதுக்குடா சம்பளம்... நீ சமைக்க ஆரம்பிச்சுட்டேனா என்இன்சுரன்ஸ் பணம் மொத்தமும் உனக்குத்தானே...!______________________________________________________________
மனைவி: என்னங்க அதோ அங்க உக்காந்து தண்ணியடிக்கிறாரே அவரு என்னை பொண்ணு பார்க்க வந்தாரு, நான் அவரை கல்யாணம் பண்ணமாட்டேன்ன சொல்லிட்டேன். அத நினைச்சே அவரு இத்தனை வருஷமா தண்ணியடிக்கிறாரு.

கணவன்: அவன் கொடுத்து வச்சவன்... அந்த சந்தோஷத்தை இத்தனை வருஷமாகொண்டாடிட்டிருக்கானேன்னு தான் ஆச்சர்யமா இருக்கு. ______________________________________________________________
மனைவி: என்னங்க நான் செத்துப்போயிட்டா... என்ன பண்ணுவீங்க?
கணவன்: எனக்கு பைத்தியமே புடிச்சுரும்.
மனைவி: நான் செத்தா இன்னொரு கல்யாணம் பண்ணுவீங்களா?
கணவன்: பைத்தியம் என்ன வேணும்னாலும் பண்ணும். ______________________________________________________________
கணவன் மனைவிக்கு கார் கதவை திறந்து கொடுத்தால் அதற்கு மூன்று காரணங்களேஇருக்க முடியும்.
1. புது மனைவியாக இருக்கும்
2. புது காராக இருக்கும்
3. அந்த பெண் மனைவியாக இருக்க முடியாது. ______________________________________________________________

புயல் மழையில் ஒருவன் பிஸ்ஸா வாங்க கடைக்கு செல்கிறான்
கடைக்காரர் : சார் உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா...
வந்தவர்: பின்ன இந்த புயல் மழைல எங்க அம்மாவா என்னை பிஸ்ஸா வாங்கஅனுப்புவாங்க...!??______________________________________________________________
லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்:
கடவுள்: மனிதா உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்?
மனிதன்: இந்தியாவுலேர்ந்து அமெரிக்காவிற்கு ரோடு போட்டு கொடுங்க சாமி!!
கடவுள்: அது கஷ்டமாச்சே...வேறு ஏதாவது கேள்.
மனிதன்: அப்ப என் மனைவி பேச்சை குறைக்கணும், நான் சொல்றதை கேட்கனும்,எதையும் வாங்கிக்கேட்ககூடாது...
கடவுள்: அமெரிக்காவுக்கு ரோடு...track ... சிங்கிளா, டபுளா...?______________________________________________________________

4 comments:

  1. //மனைவி: ஏங்க என்கிட்ட உங்களுக்கு பிடிச்சது என் சிரிப்பா,கூந்தலா, என்கண்களா?? எதுங்க?
    கணவன்: இப்படி சிரிக்காமலேயே சூப்பரா காமெடி பண்ணுறியே அதான்
    புடிச்சுருக்கு //

    இத கேட்டும் சிரிக்காம இருக்கமுடியுமா என்ன?....ஹா...ஹா....

    கடைசியா டபுள் டிராக்கே போடச்சொல்லுங்க....அமெரிக்காவிலேர்ந்து வர்ரவங்களுக்கும் வசதியா இருக்கும்....

    ReplyDelete
  2. கடைசி ட்ராக் சூப்பர்!

    ReplyDelete
  3. மிக மிக மிக ரசித்து சிரித்தேன் அருமை.

    ReplyDelete
  4. //கணவன் - மனைவி: நகைச்சுவைகள். சிரிக்காமல் தப்பிக்க முடியாது...யாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகமும் ... //

    என்னது உங்களுக்கு கலியாணம் முடிஞ்சுதா? சொல்லலவே இல்ல???? ;)

    அருமையான நகைகச்சவைகள்...

    //புயல் மழையில் ஒருவன் பிஸ்ஸா வாங்க கடைக்கு செல்கிறான்
    கடைக்காரர் : சார் உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா...
    வந்தவர்: பின்ன இந்த புயல் மழைல எங்க அம்மாவா என்னை பிஸ்ஸா வாங்கஅனுப்புவாங்க...!??//

    ஹா ஹா ஹா....

    வாழ்த்துக்கள் சகோதரா....

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள் வரவேற்கபடுகின்றன