உடுராவணனும் கணினியும்

உடுராவணன் கணினி பயிலுவதற்காக அவருக்கு ஒரு கணினி வாங்கிக் கொடுத்தார்கள். அதிலே வீட்டில் பயிற்சி ‌எடுத்தார். ஒரு முறை கணினி பழுதடைந்தது. அப்போது எனக்கு தெரிந்த ஒரு நண்பரை அழைத்து கணினியை சரிசெய்ய கேட்டுக் கொண்டோம். அந்த ஹார்டுவேர் இன்ஜினியர் கணினியில் விண்டோஸ் கரப்ட் ஆகிவிட்டது. நியூ விண்டோ இன்ஸ்டால் செய்து கொடுத்து விடுகிறேன் என்றார். ஒரு சில மணிநேரத்தில் பழுது சரிசெய்யப்பட்டு கணினி செயல்படத் தொடங்கியது. அதற்காக அவருக்கு ரூ. 750 வழங்கப்பட்டது. அவர் கிளம்பத்தயாராக இருந்தார். அப்போது பரபரப்பாக வந்த உடுராவணன் என்ன சார் முடிஞ்சதா என்றார்.. அதற்கு அவர் முடிஞ்சது ‌பழைய விண்டோ மாற்றி நியூ விண்டோ போட்டாச்சி அதற்கு கட்டணமும் வாங்கியாச்சி என்றார். அதன் பிறகு உடுராவணன் சரி சார் அந்த பழைய விண்டோவை கொடுத்து விட்டுச் செல்லுங்கள் என்றார். வந்தவருக்கு ஒன்றும் புரியவில்லை. அதற்குள் உடுராவணன் தொடர்ந்தார். கீ-போர்ட் பழுதானது புதியது மாற்றி பழையதை கொடுத்துவிட்டார்கள்... மௌஸ் மாற்றினோம் புதியது மாற்றி பழையதை கொடுத்து விட்டார்கள் தற்போது விண்டோ போய் விட்டது தாங்கள் புதிய விண்டோ மாற்றினீர்கள் ஆகையால் அந்த பழைய விண்டோவை கொடுத்து விட்டு செல்லுங்கள் ‌என்றார்... (அப்போது மயங்கி விழுந்த அவர் ஒரு வாரம் கழித்துதான் தெளிந்தது..) வீட்டிலுள்ள அனைவராலும் உடுராவணன் பாராட்டப்பட்டார்.. இந்த வயசில் இவ்வளவு பொறுப்பாகவும்.. இவ்வளவு அறிவாளியாவும் இருப்பதைக் கண்டு அனைவரும் புகழாரம் சூட்டினார்கள்.‌ ஊராரும் அங்குவந்து வாழ்த்தினார்கள்... கொஞ்சம் கொஞ்சமாக உடுராவணனின் புகழ் இந்த உலக‌மெங்கும் பரவியது.. வாழ்க.. உடுராவணன் புகழ்.. வளர்க உடுராவணன் அறிவு




Source : நெட்டில் சுட்டது - கொஞ்சம் Modified

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கபடுகின்றன