நிலையை உயர்த்து... நினைப்பை உயர்த்தாதே...!



1) நானே பெரியவன், நானே சிறந்தவன் என்ற அகந்தையை (EGO) விடுங்கள்.

2) அர்த்தமில்லாமலும், பின் விளைவு அறியாமலும் பேசிக் கொண்டிருப்பதை விடுங்கள் (LOOSE TALKS).

3) எந்த விஷயத்தையும், பிரச்சனையையும் நாசுக்காக கையாளுங்கள் (DIPLOMACY), விட்டுக் கொடுங்கள்(COMPROMISE).

4) சில நேரங்களில் சில சங்கடங்களைச் சகித்துத்தான் ஆக வேண்டும் என்று உணருங்கள் (TOLERANCE).

5) நீங்கள் சொன்னதே சரி, செய்ததே சரி என்று வாதாடாதீர்கள், குறுகிய மனப்பான்மையை விட்டொழியுங்கள்(NARROW MINDEDNESS).

6) உண்மை எது, பொய் எது என்று விசாரிக்காமல் இங்கே கேட்டதை அங்கே சொல்வதையும், அங்கே கேட்டதை இங்கே சொல்வதையும் விடுங்கள் (CARRYING TALES).

7) மற்றவர்களை விட உங்களையே எப்போதும் உயர்த்தி நினைத்து கர்வப்படாதீர்கள் (SUPERIORITY COMPLEX).

8) அளவுக்கதிகமாய், தேவைக்கதிகமாய் ஆசைப்படாதீர்கள் (OVER EXPECTATION).

9) எல்லோரிடத்திலும், எல்லா விஷயங்களையும் அவர்களுக்கு சம்பந்தம் உண்டோ, இல்லையோ சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். (RELATIVENESS)

10) கேள்விப்படுகிற எல்லா விஷயங்களையும் நம்பிவிடாதீர்கள். (MERE BELIEVING)

11) உங்கள் கருத்துகளில் உடும்புப் பிடியாக இல்லாமல் கொஞ்சம் தளர்த்திக் கொள்ளுங்கள் (FLEXIBILITY).

12) அற்ப விஷயங்களைப் பெரிதுபடுத்தாதீர்கள்.

13) மற்றவர் கருத்துக்களை, செயல்களை, நடக்கின்ற நிகழ்ச்சிகளைத் தவறாக புரிந்து கொள்ளாதீர்கள் (MIS-UNDERSTANDING).

14) மற்றவர்களுக்கு மரியாதை காட்டவும், இனிய இதமான சொற்களைப் பயன்படுத்தவும் தவறாதீர்கள் (COURTESY).

15) புன்முறுவல் காட்டவும், சிற்சில அன்புச் சொற்களை சொல்லவும் கூட நேரமில்லாதது போல் நடந்து கொள்ளாதீர்கள்.

16) பேச்சிலும், நடத்தையிலும் பண்பில்லாத வார்த்தைகளையும் தேவையில்லாத மிடுக்கையும் காட்டுவதை தவிர்த்து அடக்கத்தையும் பண்பையும் காட்டுங்கள்.

17) அவ்வப்போது நேரில் சந்தித்து மனம் விட்டு பேசுங்கள்.

18) பிரச்சனைகள் ஏற்படும் போது அடுத்தவர் முதலில் இறங்கி வரவேண்டும் என்று காத்திருக்காமல் நீங்களே பேச்சை துவக்க முன் வாருங்கள்.

19) நிலையை உயர்த்து; நினைப்பை உயர்த்தாதே.

20) விட்டுக் கொடுப்பவன், கெட்டுப் போவதில்லை.


(நன்றி - நண்பன் ஹரூன்...)

நகரில் எத்தனை காகங்கள்...? அக்பரின் கேள்வியும்...பிர்பலின் புத்திசாலித்தனம்..





பேரரசு அக்கபர் தன் அவையில் உள்ளோரிடம் புதிர்கள் மற்றும் விடுகதைகளை கேட்டு மடக்குவார்... எப்போதும் அவர் எப்போதும் நூதனமான கேள்விகளையே கேட்டு மற்றவர்களை மடக்குவார். அவரின் கேள்விகளிற்கு பதிலளிக்கவேண்டுமானால் நிறைய ஜோசிக்கவேண்டியிருக்கும்...

அதே போல் ஒருநாள் அக்பர் தன் அவையோரிடம் ஒரு கேள்வியை கேட்டார்... அவரின் கேள்வியால் அவையோர் வாயடைத்துப்போனார்கள். அவர் அப்படி என்னதான் கேட்டார்...விடயளிப்போரை தேடி அக்க்பரின் தலை அவை சுற்றி வந்தது...அவையோரோ விடை தெரியாமல் தலை குனிந்து இருந்தனர்...

அந்த நேரம் பார்த்து பீர்பால் அவையுள் நுழைந்தார்...பீர்பால் மன்னரைபற்றி நன்கு அறிந்தவர் அவருக்கு நிலைமை விளங்கி விட்டது... பீர்பால் அக்பரை பார்த்து கேட்டார்..மன்னா கேள்வி என்ன என்று நான் அறியலாம..நானும் கொஞ்சம் முயன்று பார்கிரேனே...

அக்பர் கேட்டார்..."இந்த நகரத்திலே எத்தனை காக்கைகள் உள்ளன?..."



கொஞ்சம் கூட தாமதிக்காமல் பீர்பால் சொன்னார்.."மகராஜா இந்த நகரத்திலே ஐம்பதாயிரத்தி ஐநூற்றி எண்பத்தி ஒன்பது காகங்கள் உள்ளன.."




அக்பர் கேட்டார்.."அதை எப்படி உன்னால் துல்லியமாக கணிக்க முடிந்தது..இது சரியான பதில்தான...?"

பீர்பால் சொன்னார்.."ஆம் மன்னா இது சரியான கணக்குதான்..வேண்டுமானால் உங்கள் ஆட்களை விட்டு எண்ணச்சொல்லுங்கள்... நான் சொன்ன கணக்கைவிட அதிக காகங்கள் இந்த நகரத்திலே காணப்பட்டால் அவை வேறு இடங்களில் இருந்து தமது உறவினரை பார்க்க வந்த விருந்தாளிக்காகங்களாக இருக்கும் அப்படி இல்லாமல் நான் சொன்ன கணக்கைவிட குறைவான காகங்கள் இருந்தால் எமது நகர காகங்கள் சில / பல தமது உறவினரை பார்க்க வேறு இடங்களிற்கு போயிருக்கலாம்...

மன்னர் அக்பர், பிர்பலின் இந்த புத்திசாலித்தனமான பதிலால் மிகவும் சந்தோசப்பட்டார்...


MORAL : A witty answer will serve its purpose.

உடுரவணன் Colombo போய்ட்டாருங்கோ...மனைவிக்கோ உயிரு போய்ட்டுதுங்கோ....



உடுரவணன் அலுவலக விடயமாக தலைநகர் வந்தார்.. வந்து இறங்கியவுடன் தொலைபேசியில் தான் பத்திரமாக Colombo வந்த விடயத்தை மனைக்கு சொல்ல அழைத்தார். இனி நடந்தது உரையாடல் வடிவில்...



டிரிங் டிரிங் மறுமுனை தூக்கப்பட்டவுடன்...

உடுரவணன்: யார் பேசுறது...

(அழைப்பை எடுத்ததோ வீட்டு வேலைக்காரன்...)

வேலைக்காரன்: வீட்டு வேலைக்காரன் அய்யா...

உடுரவணன்: அம்மா எங்கே...?

வேலைக்காரன்: மாடியில் அய்யாவோட தூங்கிகிட்டிருக்காங்க அய்யா...

உடுராவணன்: என்ன...அய்யாவோடயா..? அட மடையா நான்தான்ட அம்மாவோட புருஷன்... இன்னைக்குத்தான் Colombo வந்தேன் அதுக்குள்ளய...?

வேலைக்காரன்: அய்யா நான் இப்ப என்ன செய்யட்டும்...?

உடுரவணன்: அலுமாரியை திறந்துபார் உள்ளே துப்பாக்கி ஓன்று இருக்கும் அதை எடுத்துக்கொண்டு போய் இருவரையும் சுட்டு விட்டு வந்து சொல் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று நான் சொல்லுகிறேன்...




கொஞ்ச நேர நிசப்த்தத்தின் பின் இரு வேட்டு சத்தங்கள் கேட்டது... அதன் பின்னர்...

வேலைக்காரன்: ஆம், சுட்டுவிட்டேன் அடுத்து என்ன செய்யட்டும்...

உடுராவணன்: வெரி குட்.. வீட்டின் பின்னுள்ள கதவைத்திறந்து இரண்டுபேரையும் பின்னாலுள்ள நீச்சல்தடாகத்துள் வீசு வேலை முடிந்தது..




வேலைக்காரன்: ஆனால் அய்யா இந்த வீட்டில் நீச்ச்ல்தடாகம் ஒன்றும் இல்லையே...

உடுராவணன்: என்ன...? நீச்சல்தடாகம் இல்லையா...???

வேலைக்காரன்: ஆம் அய்யா இங்கு அப்படி ஒன்றும் இல்லை...

உடுராவணன்: Sorry Wrong நம்பர்!!!!!!!!!