எளிய முறையில் முகாமைத்துவத்தை கூறுவதாயின்... ஒரு நிறுவனத்தினதோ... அல்லது தனிப்பட்ட ஒருவரினது குறிப்பிட்ட இலக்கை அடையும் நோக்கில் மனித வலுவையும் ஏனைய காரணிகளையும் ஒன்றிணைத்து செயல்படுவதே முகாமைத்துவம் ஆகும்.
இன்னும் எளிய முறையில் சொல்வதேயானால் ஒரு இலக்கை அடையும் நோக்கில் செயல்படுதல் முகாமைத்துவம் ஆகும்.
பரந்தளவில் முகாமைத்துவத்தை நோக்கும் போது முகாமைத்துவமானது பின் வரும் செயல்பாடுகளை உள்ளடக்கியதாக காணப்படும்.
- திட்டமிடல் - Planning
- ஒழுங்கமைத்தல் - Organizing / Coordination
- வழிநடத்தல் - Leading
- கட்டுப்படுத்தல் - Controling
என நான்கு படிமுறைகளை / செயற்பாடுகளை கொண்டதாக அமையும் .
முகாமைத்துவ எண்ணக்கருக்களையும், அடிப்படி கோட்பாடுகளையும் விளக்க பல நூற்றுக்கணக்கான புத்தகங்களும், ஆக்கங்களும், வெளியீடுகளும், ஆராய்ச்சிகளும் காணப்படுகின்றன இவை அனைத்தும் முகமைதுவத்தில் காணப்படும் கோட்பாடுகளையும், எண்ணக்கருக்களையும் விளங்கப்படுதுவதுடன் அவற்றை நாளந்த செயட்படுகளில் பயன்படுத்துவதன் மூலம் பெறக்கூடிய நன்மைகளையும் விளக்குகின்றன.
இவை அனைத்தும் முகாமைத்துவத்தை ஒரு விஞ்ஞானமாக மட்டும் பார்க்காமல் அதை ஒரு கலையாகவே கருதுகின்றன .
இந்த முகாமைதுவக்கொள்கைகளை பயன்படுத்தி எவ்வாறு ஒரு நிறுவனத்தை கட்டி எழுப்புவது என பல ஆராய்ச்சி கட்டுரைகளிலும், பல சமகால சம்பவங்களை மேற்கோள் காட்டியும், உண்மை சம்பவங்கள், அனுபவங்களையும் மேற்கோள் காட்டி சொல்லப்படுகின்றது.
தற்கால மேற்குலக முகாமைத்துவ குருக்களின் தோன்றுதலுக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே இவ்வாறான முகாமைத்துவ கோட்பாடுகளின் நடைமுறைகளை எம்மவர்கள் மிக அழகாக விளக்கி சொல்லும் வகையில் பல இதிகாசங்களை புனைந்துள்ளனர். பழம்பெரும் எழுத்தாளர்களான வால்மீகி, துளசிதாஸ் போன்றோர் தமது இந்து இதிகாசங்கள் மூலம் இந்த முகாமைத்துவ கோட்பாடுகளை அழகாக விளக்கியுள்ளனர்.
எமது பலம் பெரும் இதிகாசங்களை படிப்பதன் மூலம் இந்த முகாமைத்துவ கோட்பாடுகள் அதில் எவ்வாறு விளக்கப்படுள்ளன என விரிவாக அறிந்துகொள்ள முடியும். இந்த இதிகாசங்களின் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வுகளும் எங்களுக்கு ஒவ்வொரு புதிய பாடங்களை புகட்டுவதோடு, எவ்வாறு முகாமைத்துவ கொள்கைகள் சூட்சுமமாக பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதையும் அழகாக விளக்கி கூறுகின்றன.
இரமாயனதிலிருந்து சில உதாரணங்கள்...
ஹனுமான் இலங்காபுரிக்கு செல்லும் பகுதியில் வால்மீகி தனது முகாமைத்துவ பாண்டித்தியத்தை அழகாக காடியுள்ளார்.
ஹனுமான் இலங்காபுரிக்கு செல்வதன் முக்கிய நோக்கம்
இலங்காபுரியில் சீதாதேவியை எங்கே சிறை வைத்துள்ளார்கள் என்று கண்டறிய வேண்டும் இராமபிரானின் செய்தியை சீதபிராட்டியிடம் சேர்க்கவேண்டும்
சீதாபிராட்டி இலங்காபுரியில் சிறை வைக்கப்பட்ட விடயம் ஊர்ஜிதப்படுத்தபட்டபின் ஹனுமான்
இலங்காபுரி செல்ல பணிக்கப்படுகின்றார். இதன் மூலம் ஹனுமானின் உண்மயான திறமை, பலம் வெளிக்காட்டப்படுகின்றது. எதிரியின் பாசறையினுள் செல்லும் தைரியமும் , பலமும் ஹனுமனுக்கே உள்ளது என்ற திறமையை அடையாளம் கண்டு அந்த பணியினை அவருக்கு ஒதுக்குகின்றனர்.
இவ்வாறு அடையாளம் காணப்ப்டட்ட பின் இலங்காபுரி வந்த ஹனுமான் முதலில் செய்த வேலை இலங்காபுரியின் நிலைமையை முற்றாக அலசி ஆராய்ந்தது. (Situation Analysis)
ஹனுமான் சகல சந்தர்ப்பங்களிலும் ஒரு சிறந்த முகாமையாளரகவே செயற்பட்டார்.
எதிரியின் பாசறையில் காணப்படும் பலம் (Strength), பலவீனம் (Weakness) என்பவற்றை ஆராய்ந்ததோடு. இலங்காபுரியில் காணப்படும் சாதக (Opportunities), பாதக (Threats) நிலைமைகளையும் ஆராய்ந்து செயற்பட்டார். (SWOT Analysis).
- இதுவே முகாமைத்துவத்தின் முக்கிய பண்புகளாக காணப்படுகின்றன;
- அடையவேண்டிய இலக்கை அடையாளம் கானல்...
- மனதளவில் தயார் நிலைக்கு உள்ளாதல்...
- சரியான திட்டமிடல்...
- எதிரியின் பலம், பலவீனத்தையும், தங்களின் சாதக, பாதகங்களையும் இனம்காணுதல்....
- செயற்பாட்டில் இறங்குதல்...
அப்புறம் என்ன வெற்றி உங்கள் பக்கம் தான்...
பகுதி II இல் மீண்டும் சிந்திப்போம் .......
This comment has been removed by the author.
ReplyDeleteஎவ்வளவுதான் double space அடித்தாலும், பதிவை publish செய்தவுடன் space காணமல் போய் விடுகிறது... இடைஞ்சலுக்கு வருந்துகிறேன்...
ReplyDeletePlease write more about this,even you can touch project management
ReplyDeleteHi Cherankrish, thanx 4UR visit and encouragement, will try to build it up
ReplyDelete