இராமாயணமும் .... முகாமைத்துவமும் ... PART II

தற்கால முகாமைத்துவத்தில் SWOT (strength, weakness, opportunities and threats) ஆய்வு மிக முக்கிய பங்கினை வகிக்கின்றது.

இராமாயணத்தில் ஹனுமன்தான் இலங்காபுரிக்கு செல்லவேண்டும் என முடிவு செய்தது நல்ல ஒரு முகாமையாளனின் பண்பினை எடுத்துக்கட்டுகிறது. நல்ல ஒரு முகாமையாளன் ஆனவன் தன் கீழ் பணிபுரியும் ஆட்களின் ஒளிந்திருக்கும் திறமைகளையும், நல்ல பண்புகளையும் வெளிக்கொண்டுவரும் வகையில் செயல்படவேண்டும்.



இராமாயணத்தில் அறிய வேண்டிய இன்னுமொரு நல்ல படிப்பினை நல்ல மற்றும் கெட்ட முகாமையாளருக்குரிய பண்புகளாகும்.



பல்வேறுபட்ட இயல்புகளை கொண்ட மனித வளங்களை சரியாக ஒன்றிணைப்பதன் மூலம் குறிப்பிட்ட இலக்கையோ அல்லது நோக்கத்தையோ அடையும் நோக்கில் செய்யட்படுபவனே நல்ல ஒரு முகாமயாளன் ஆகமுடியும்.



இந்த வகையில் இராமாயணத்தில் சுக்கிரீவன் ராமனின் துணையுடன் தன்னை விட பல மடங்கு ஆற்றல் கொண்ட தன சகோதரனிடமிருந்து ராட்சியத்தை கைப்பற்றியது நல்ல ஒரு முகாமையாளனின் பண்பினை வெளிப்படுத்துகின்றது. குறிப்பிட்ட நோக்கத்தினை அடையும் நோக்கில் தந்திரோபாய உறவுகளை (strategic alliance ) வளர்த்துக்கொள்வது நல்ல முகாமையாளனின் ஒரு பண்பு, அது சுக்க்ரீவனிடம் காணப்படுகின்றது.



சுக்ரீவன் தன்னிடமிருந்த முகாமைத்துவ ஆற்றலை பயப்படுத்தி அங்கதனையும் தனது நோக்கத்தினை அடையும் நோக்கில் செயல்பட்டது நல்ல முகாமையாளனின் பண்பினை காடுகின்றது.

பகைவர்களை வெல்லவல்ல தோள் வலிமையையும், குற்றமற்ற தூய்மை நிலையையும் கொண்ட அங்கதான் தன்னிடம் அடைக்கலப்படுத்தப்பட்ட பின் இராமன் தன் உடைவாளை அளித்து ஏற்றுக் கொண்டான். இத்தகைய அடைக்கலச் சிறப்பால் இராமனது உடைவாளை ஏந்தும் சிறப்புப் பெற்றவன் அங்கதன் ஒருவனே - this is called Strategic Alliance


மீண்டும் பகுதி III இல் சந்திப்போம்...

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கபடுகின்றன